google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி...14 (தொடர் சிந்தனை)

Wednesday, January 9, 2019

வெற்றியைத் தேடி...14 (தொடர் சிந்தனை)

கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்பார்...
என்னைக் கேட்டால்
கற்கை நன்றே சுந்தர் பிச்சை போன்று கற்கை நன்றே. இல்லையேல் பிச்சை எடுப்பதே நன்று என்பேன்.

அவரது வாழ்க்கை ஓர் இந்தியனுக்கு மட்டுமல்ல....
ஒரு தமிழனுக்கு மட்டுமல்ல....
உலக மாந்தர் அனைவருக்கும் எடுத்துக்காட்டு....

நானும் 1983-ல் எங்கள் ஊரிலிருந்து படித்த முதல் முதுகலை ஆங்கில பட்டதாரி ஆசிரியர் (M. A. B. Ed.)...
ஆனாலும் ...
என்னால் சரிவர ஆங்கிலத்தில் உரையாட முடியவில்லை.
பல ஆங்கில எழுத்து போட்டியில் முதல் பரிசு பெற்ற என்னால் கடைசிவரை ஆங்கிலத்தில் உரையாட முடியவில்லை.
அது என் கல்வி திறனா..? அல்லது ஆங்கிலம் சரிவர பேசத்தெரியாத எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் கோளாறா...?
ஆனாலும்...

மனம் தளராமல் ஆசிரியர் வேலையை தேர்ந்தெடுக்காமல் வியாபார துறையை தேர்ந்தெடுத்து இரண்டு முறை லண்டன் பயணித்து ஆங்கிலேயருடன் உரையாடி உள்ளேன் என்பதில் என் வாழ்க்கையில் வெற்றி அடைந்துள்ளேன்


இந்த உலகில் உயிர்வாழ மனிதர்கள் மட்டுமன்றி அனைத்து உயிர்களும் போராட வேண்டும்...
போராடத் தெரியாதவர்கள் வெற்றியை மட்டுமல்ல வாழ்க்கையையும் இழந்து விடுவார்கள்.

இந்த போராட்டத்துக்கு தேவை வெறும் முயற்சி அல்ல
விடா முயற்சி.. கீழே விழாமுயற்சி

#வெற்றியைத் தேடி... (தொடரும் சிந்தனை)



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1