google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி...9 (தொடர் சிந்தனை)

Monday, December 24, 2018

வெற்றியைத் தேடி...9 (தொடர் சிந்தனை)


இன்றைய உலகில் நமது வெற்றியைத் தேடிய பயணத்தில் வெற்றியை அடைய முக்கியமாக இருப்பது  பணம் என்றாகிவிட்டது

என்றும் உலகை ஆள்வது பணமே பிரதானம் என்றாலும் இன்று பணமே மனிதாபிமானத்தை கொன்று விட்டது.
ஆனால்....
பணத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

எனது துணைவியார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது ஒரே வருடத்தில் எனது சேமிப்புகளிலிருந்து ரூபாய் 25 லட்சம் சேலவு செய்தும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை .

இதுபோன்ற நிகழ்வுகள் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்
உண்மையில் பணத்தால் எதையும் சாதிக்க முடியாது.
வாழும் காலங்களில் பணம் சம்பாதிக்க  நாம் செலவிடும் காலத்தை குறைத்துக் கொண்டு
வாழும் வரை நம் குடும்பத்தோடு
சந்தோசமாக வாழ்வதே மேல்...
இதிலிருந்து நாம் அறிவது...

பணம் சம்பாதிப்பதே வெற்றி அல்ல... சந்தோஷத்தையும் நிம்மதியையும் சம்பாதிப்பதிலேயே நம் வெற்றி உள்ளது.



#வெற்றியைத் தேடி...(தொடரும் சிந்தனை)

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1