இது சிங்கம் விமர்சனம் அல்ல நன்றியுள்ள் ஒரு நாய் விமர்சனம்
எல்லோரும் சிங்கம் 3 படம் விமர்சனம் எழுதும் போது நீ என்ன நாய் குறும்பட விமர்சனம் எழுதிகிட்டு இருக்க...? என்று உங்களுக்கு கேட்க தோன்றினால்...
மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்றடி.என்.ஏ (DNA) க்களைக் கொண்டு 150,000 ஆண்டுகளுக்கு முன்னமேயே கூட நாய்கள் பழக்கப்பட்டிருக்கலாம்
நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது
நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டே திரிவதால் 'நாய்' என்னும் பெயர் தமிழில் தோன்றியது. ஞாளி, ஞமலி என்பன நாயைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்த் திசைச்சொற்கள்
நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு
என்று அறிய பல அரிய தகவல்களை நாய் பற்றி தமிழ் விக்கிப்பீடியா தருகிறது
இது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த குறும்படத்தை பாருங்க....
இது நாய் அல்ல அதுக்கும் மேல....
உணவு கொடுத்தவருக்கு விசுவாசமாக அவரது வாகனம்,உடமைகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறது மட்டுமல்ல அவரது காதல் உணர்வுக்கு வழிகாட்டியாக இருக்கிறது
இந்த படத்தில் காதைப் பிளக்கும் கூப்பாடு சத்தம் இல்லை
கட்டிப் புரளும் சண்டைகள் இல்லை
பாய்ந்து சீரும் கார்கள் இல்லை
அமைதியான
அருமையான
நளினமான காதல் மட்டுமே உண்டு
பிகு-யாராவது திட்டுவதாக இருந்தால் அப்படி ஓரமா போயிடுங்க இது நன்றியுள்ள நாய்களுக்கு என் நன்றி நவிலல்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |