சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய பல ஆயிரம் தன்னார்வலர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு நடந்த விழாவில்.....
ஒரு ஊடக நிருபர் சிம்புவின் பீப் சாங் பற்றி இளையராஜாவிடம் கேள்வி கேட்க.....
உனக்கு அறிவு இருக்கா? எங்கு வந்து எதை கேட்கிறாய்?
......என்று எரிச்சல் அடைய...
அவர் கேட்டதும் சரியே என்று ஒரு சிலரும்.....
ஒரு நிருபர் இன்னோர் இசையமைப்பாளரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பார்?என்று சிலரும்......
டிவிட்டரில் இளையராஜாவை விமர்சிக்கிறார்கள்
இங்கே சில கீச்சுக்களை பார்ப்போம்
Cartoonist bala-
இளையராஜா அப்படி கேட்காமல் விட்டிருந்தால்தான் வருத்தப்பட்டிருக்க வேண்டும்..
ஜேம்ஸ் வசந்தன்-
ஒளிந்துகொண்டிருக்கிற நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிக்கையாளனை பாராட்ட வேண்டும்.
kanda-
அடேய்களா இளையராஜா தான நேத்து ராத்திரி எம்மா தூக்கம் போச்சுடி எம்மா பாட்ட போட்டது சும்மா புனிதர் ரேஞ்சிக்கு பிட்ட போடாதிங்க
ஆல்தோட்ட பூபதி-
இளையராஜா என்ன மானாட மயிலாட ஜட்ஜாடா, நீ மார்பாட்டி ஆடிட்டு 'மாஸ்டர் எப்படியிருக்கு' கேட்டவுடனே மார்க் போடுறதுக்கு? அடிங்கொய்யாலே
யுகராஜேஷ்-
ட்விட்டருல நடக்கிற சண்டைய தொடர்ச்சியா படிச்சிட்டு இளையராஜா பாடுன எந்தப் பாட்டைக்கேட்டாலும் அறிவிருக்காய்யா?ன்னே கேட்கிற மாதிரியே இருக்கு.
யோவ் ...மீடியா உங்க டூத் பேஸ்ட் ல
உப்பு இருக்கா?..ஈ வே ரா fb @Pattinattaar
இடம் பொருள் ஏவல் தெரியாம இதுபோன்ற கேள்வி கேட்கும் ஊடக ஆட்களுக்கு இது தேவைதான்...
@Rajatalks
அந்த கேள்வி தவறானால் பதில் சொல்லாம போயிருக்கலாம் அறிவிருக்கானு சாடுறது எந்த மாதிரியான மனநிலைபோக்கு!?
@Raju-boy
இப்ப இருக்க பேஸ்புக் ட்விட்டர் அப்பவே இருந்திருந்தா இளையராஜா மேல எவ்வளவோ கேஸ் இருந்திருக்கும்...
@Sevvanthiclub
என்னமா சொல்லுறீங்க? பீப்.... பீப்.... பாடலுக்கு இளையராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டுமா ? #Ilaiyaraja #BeepSong
@Writter_naina
விருமாண்டி கமல் ரிப்போர்டர்ட எதிர்கேள்வியா கேப்பாரே- உன்னோட உள்பாடி சைஸ் என்னன்னு?கோபம்வருதுல்ல? அப்புடிதான் எனக்கும் -விருமாண்டி இளையராஜா
@arunkumar_tiger
இளையராசா முகத்திரை வெளுத்துவிட்டது- சென்னை பத்திரிக்கையாளர் சங்கம்,
போடா வெண்ணெய் மஞ்ச பத்திரிக்கை நடத்தும் நீங்க இதை சொல்றீங்களாடா???
சக்தி பாலன்-
ஆனால் இதில் உண்மை என்னவென்றால் இசை ஞானியை எதித்து தன்னை அறிவுசீவியாக காட்டிக்கொள்ள நினைக்கும் விசித்திரமான பிறவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எது எப்படியோ காரணமின்றி அவர் கோபப்படவில்லை -சிந்தனைவாதி
ஒரு நிருபரிடம் இளையராஜாவின் கோபம் நியாயமா...? தவறா...?
உங்கள் வாக்குகளை இங்கே பதிவு செய்யுங்கள்
https://twitter.com/PARITHITAMIL/status/677819199981531137மேலும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |