ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் உண்டு என்பார்கள் இது எந்த அளவுக்கு உண்மை என்பது மனைவியை இழந்த கணவர்களை கேட்டால் மட்டுமே சரியாக இருக்கும்
சில நேரங்களில் ஒரு ஆணின் தோல்விக்கும் அழிவுக்கும் ஒரு பெண்ணே காரணமாக இருந்த வரலாறுகளும் உண்டு அது விதிவிலக்கு
ஒருமுறை அமெரிக்க அதிபர் ஒபாமா தன் மனைவி மிசேல் ஒபாமாவை அழைத்துக்கொண்டு
அழகான ஆனால் ஆடம்பரமில்லாத ஓர் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் அவர்களின் திடீர் வருகையை அறிந்த ஓட்டல் முதலாளி சந்தோசத்தில் துள்ளிக் குதித்தார்
அந்த ஓட்டல் முதலாளி அதிபர் ஒபாமாவிடம்....
"நான் உங்கள் மனைவி மிசேல் ஒபாமாவிடம் தனியாக ஒரு சில நிமிடங்கள் பேச முடியுமா?"
என்று அனுமதிகேட்டு வினாவினார்
ஒபாமாவும் ஒப்புக்கொள்ள மிசேல் ஒபாமாவிடம் அந்த ஓட்டல் முதலாளி ஒரு சில நிமிடங்கள் தனியாகப் பேசினார்
பிறகு அதிபர் ஒபமா தன் மனைவியிடம்....
" நீங்கள் இருவரும் அப்படி என்ன தனிமையாகப் பேசினிர்கள்?
என்று கேட்க.....
மிசேல் ஒபாமா எவ்வித தயக்கமும் இன்றி......
"இந்த ஓட்டல் அதிபர் என் பருவ வயத்தில் என்னை உயிருக்கு உயிராக காதலித்தாராம்"
என்று சொன்னார்
அதற்கு அதிபர் ஒபாமா மிசேல்லிடம்.....
"மிசேல்.....நீ இந்த ஓட்டல் அதிபரை மணந்திருந்தால் ஒரு அழகான ஓட்டலுக்கு முதலாளி ஆகியிருப்பாய்"
என்றார் சிரித்துக் கொண்டு
மிசேல் மிகவும் அமைதியாக......
"இல்லை இல்லை
இந்த ஓட்டல்அதிபர்தான் இன்று அமெரிக்கா அதிபராக இருப்பார்"
இப்ப புரிகிறதா நண்பர்களே!
சமீபத்திய ஒபாமா-மிசேல் இந்திய வருகையின் போது மிசேல்லுக்கு மோடி ஏன் நூறு பட்டுப்புடைவைகளை பரிசளித்தார்...? என்று
அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் வெற்றிக்கு பின் இருந்தவர் அவரது மனைவி மிசேல் ஒபாமா என்பதை நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிந்து கொண்டதால்தான்.......
யோவ்....குமுட்டை பதிவரே!
மோடியே அவரது மனைவி ஜசோதா பென்-னை கடந்த 43 ஆண்டுகளாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்
அப்படினா மோடியின் வெற்றிக்கு பின் எந்த பெண் இருக்கிறார்?
அண்ணேன்....
இப்பவும் மோடி மனைவி அவருக்கு பின்னாடி இல்லாவிட்டாலும் அவரது மனைவியின் பிராத்தனை அவருக்கு முன்னாடி இருக்குங்க
சரி சரி நமக்கெதுக்கு அரசியல் வம்பு?
மனைவி அமைவ தெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
thanks-YouTube
வெளியே போகும் போது முத்தம் கொடுக்காதே
இப்ப போதையில் வாகனம் ஒட்டியதாக
ட்ராபிக் போலீஸ்காரர் கேட்கிறார் என்ன சொல்ல? pic.twitter.com/vDq87uPeM3
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) March 16, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |