எதுவும் பேசாமல் ஒரு பெரிய லட்டர் பேடு நிரம்ப எதையோ கிறுக்கி தந்த டாக்டர்.....
"இந்த டெஸ்ட்லாம் நம்ம லேப்ல எடுத்துட்டு வாங்க
சரிபண்ணிடலாம் " என்றார்
அந்த மருத்துவமனை லேப்க்கு போனால்......
இரத்தப் பரிசோதனைக்கு ஒரு பெரியஊசி முழுக்க இரத்தம் புடிச்சிக்கிட்டார் பரிசோதனை செய்றவர்
அப்புறம் யூரின் டெஸ்ட்.....ஒகே ஒகே
ஆனால் அந்த மோசன் டெஸ்ட் அதுதான் நம்பர் 2 டெஸ்ட்.....
அதென்ன நினைச்ச உடனே வருமா...?
அப்புறம் பார்த்துக்கலாம்னு விட்டாச்சு
அப்புறம் ECG எடுத்தாச்சு.....
.இன்னொன்னு பெரிய டெஸ்ட் ஹார்ட் டெஸ்ட்
இதெல்லாத்துக்கும் சேர்த்து ரூபாய் பத்து ஆயிரத்த தாண்டியாச்சு
மறுநாள் ரிபோர்ட் வாங்கிகிட்டு டாக்டர்கிட்ட போனால்
இரண்டு டைப் மாத்திர கொடுத்தாரு ...
நைட்ல தூங்க போகிறதுக்கு முன்னாடி பத்து நாளைக்கு போடச் சொன்னாரு....பத்து நாள் கழிச்சு வாங்கனு சொன்னார்
அந்த மாத்திரைகளைப் போட்டால்.....
நல்லா தூக்கம் வந்துச்சு அடடா...குணமாச்சே
என்னடா இந்த டாக்டர்ர்ர்ரர்ர்ர்ர் கொடுத்த மாத்திரைக்கு
இப்படி அடிச்சு போட்ட மாதிரி தூக்கம் வருதேன்னு
டவுட்ல போயி மெடிக்கல் ஷாப் நண்பர்கிட்ட போய் கேட்டா.......
"இது தூக்க மாத்திர
அது உடம்பு வலி மாத்திர
இத என்கிட்ட கேட்டா நானே கொடுத்திருப்பேனே" என்றார்
பத்து தூக்க மாத்திரகள் விலை பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய அறிவாளி நானாகத்தான் இருப்பேன் என்று நினைத்தால்.......
அது முட்டாள்தனம் நாட்டுல எல்லோரும் இப்படித்தான் ஏமாந்துகிட்டு இருக்கிறார்கள்
இப்பலாம் தூக்கம் வரலைனா
இந்த டாக்டர்ர்ர்ரர்ர்ர்ரை நினைச்சாலே போதும்
கும்பகர்ணன் மாதிரி தூக்கம் வருதுங்கோ சாமி
இப்படி பட்ட நாட்டுலத்தான் டாக்டர் நாராயணசாமி அய்யா மாதிரி டாக்டர் தொழிலை சேவையாக செய்யும் டாக்டர்களும் இருக்கிறாங்கன்னு நினைச்சா ஆச்சரியமாய் இருக்குங்க
15 வருடங்களுக்கும் மேலாக சேவை மனப்பான்மையுடன் 20 ரூ மட்டுமே ஆலோசனை கட்டணமாக பெறும் காரைக்கால் மருத்துவர் நாராயண சாமி pic.twitter.com/pHHnLhXt0M
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) March 13, 2015
இந்த ட்விட்டை RT செய்து டாக்டர் நாராயணசாமி அய்யா அவர்களின் நல்ல மனதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க நண்பர்களே!
அது அவருக்கு நீங்க செய்யும் பாராட்டு வாழ்த்து நண்பர்களே!!
அதைப் பார்த்தாவது நாலு வசூல்ராஜா MBBS டாக்டர்கள் திருந்தட்டும் நண்பர்களே!!!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |