எல்லோரும் உன் தலையில் கொட்டும் போது....
அவமானத்தால் குனிந்து விடாதே; நிமிர்ந்து நில்
கொட்டும் கரங்கள் வலிக்கட்டும்
யாரும் உன்னை நம்பாத போது......
நீயே உன்னை நம்பு; தன்னம்பிக்கை
அவர்களைப் பார்த்து சிரிக்கட்டும்
ஓர் அறிவாளியின் அடையாளம்
அவன் தோற்றத்தில் இல்லை
அவன் பேசும் வார்த்தைகளில்.......
இழப்புகளை நினைத்து கலங்காதே
இழப்புகள் என்று எதுவுமில்லை
எல்லா வடுக்களையும் அழித்துவிட்டு
மீண்டும் முதலில் இருந்து துவங்கு
எதிரிகளை மன்னித்துக் கொண்டே இரு
விரோதிகள் எவரும் இருக்கமாட்டார்கள்
நம்பிக்கையுடன் கைகளை நீட்டு
உன் உள்ளங்கையில் உலகம்
எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிந்திருந்தும் அமைதியாகவே இருக்கிறது # அகராதி
— ஏஞ்சலின் (Angel) (@Lin31183) February 12, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |