google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: உன் உள்ளங்கையில் உலகம்

Thursday, February 12, 2015

உன் உள்ளங்கையில் உலகம்


எல்லோரும் உன் தலையில் கொட்டும் போது....
அவமானத்தால் குனிந்து விடாதே; நிமிர்ந்து நில் 
கொட்டும் கரங்கள் வலிக்கட்டும் 

யாரும் உன்னை நம்பாத போது......
நீயே உன்னை நம்பு; தன்னம்பிக்கை 
அவர்களைப் பார்த்து சிரிக்கட்டும் 

ஓர் அறிவாளியின் அடையாளம் 
அவன் தோற்றத்தில் இல்லை 
அவன் பேசும் வார்த்தைகளில்.......

இழப்புகளை நினைத்து கலங்காதே
இழப்புகள் என்று எதுவுமில்லை 

எல்லா வடுக்களையும் அழித்துவிட்டு 
மீண்டும் முதலில் இருந்து துவங்கு 

எதிரிகளை மன்னித்துக் கொண்டே இரு 
விரோதிகள் எவரும் இருக்கமாட்டார்கள் 




 



















நம்பிக்கையுடன் கைகளை நீட்டு 
உன் உள்ளங்கையில் உலகம்





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1