முதலில் நீங்கள் நாவலில் எதை எழுதுகிறீர்கள் என்பது முக்கியமல்ல
உங்கள் நாவலுக்கு நீங்கள் வைக்கும் பெயர் அசத்தலாக அதேநேரம் பெண்வாடை வீசும்படி ஆனால் யாருக்கும் புரியாதபடி இருக்கவேண்டும்
உதாரணத்துக்கு நித்திலா நித்திரை -னு பெயர் வைசிங்கனா அண்டகாகசம் யாருக்கும் புரியாது ஆனால் புரிஞ்சமாதிரி இருக்கும்
இப்படி நீங்கள் நாவலுக்கு வைக்கிற வைக்கிற பெயருக்கு சம்பந்தமில்லாமல் எதையாவது எழுதுங்கள் எதுவும் எழுத வரவில்லை என்றால் இப்ப நான் எழுதின மாதிரி உங்கள் சுயபுராணத்தை வேறு பெயரில் எழுதுங்கள் உங்கள் பெயரில் எழுதினால் அது யதார்த்த நாவலாகிவிடும் அப்படியும் எழுதவரவில்லை என்றால்.......
பழைய தினநாளிதழ்களை புரட்டினால் நிறையக் கள்ளக் காதல்,வெட்டு,குத்து,கொலை,லஞ்சம்,லாவண்யம்....எதையாவது எழுதுங்கள் பயப்படாதீங்க அதை முன்னாடி படித்தவர்கள் எல்லோரும் மறந்துவிட்டிருப்பார்கள்
இன்னும் எழுத வரவில்லையா டாஸ்மாக் நெப்போலியனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை இப்போது நிறைய நாவலாசிரியர்களுக்கு அவர்தான் கடவுள்
இப்படி நீங்கள் நிறைய எதையாவது எழுதி விட்டு .........அய்யோ மறந்திட்டேனே...நீங்கள் எழுதியவைகளின் இடை இடையே சில நல்ல வார்த்தைகளை அல்லது அவைகளின் முதல் எழுத்தை உதாரணமாக......... மூ.கூ....தே.ம...... க....சு...பு....போன்று சொறுகி வை........யுங்கள்.....த்தா போடா மறந்துவிடாதீர்கள்
ஹி...ஹி....இப்ப நீங்கதான் பெரிய இலக்கியவியாதி... ச்சே...இலக்கியவாதி
இன்னும் பெண்களின் அங்கங்களை அதிலும் மூடி மறைக்கப்பட்ட செக்ஸ் உறுப்புகளை ரொம்ப ரசனையாக வர்ணித்து அங்கே இங்கே சிதறலாக எழுதிவையுங்கள் நீங்கள் விருது வாங்கும் எழுத்தாளர் ஆகலாம் உங்கள் நாவல் சினிமாவாகலாம்
(யோவ்...இந்த கருமாந்திரத்தத்தான் நிறைய பேரு எழுதிக்கிட்டு இருக்கிராயிங்களே போயா புண்ணாக்கு பதிவரே!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |