சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் தனது பாடல்களால் விடுதலை வேட்க்கையை தமிழர்கள் இதயங்களில் விதைத்த பாரதியார் 1921-ல் காலமானார்
ஆயினும் அவரது இறை உணர்வு,தேச உணர்வு, விடுதலை வேட்கை,சமூக எழுச்சி,காதல் பாடல்கள் பல திரையிசைப் பாடல்களாக இன்றும் நம் இதயங்களை வருடுகின்றன
ஜனவரி 12, 1947 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் அடையும் தருவாயில் ஏ. வி. மெய்யப்பன் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த நாம் இருவர் திரைப்படத்தில்சுதர்சனம் அவர்கள் இசையமைப்பில்.........
T.R.மகாலிங்கம்,D.K.பட்டம்மாள், T.S.பகவதி,தேவநாராயணன்...பாடிய விடுதலை விடுதலை,ஆடுவோமே, வெற்றி எட்டுதிக்கும்,சோலைமலர், வாழிய செந்தமிழ்...போன்ற பாரதியாரின் பாடல்கள் மக்கள் மனதில் பெரிய விடுதலை ஏக்கத்தையும் தாக்கத்தை உருவாக்கின
மீண்டும் சுதந்திரத்திற்குப் பிறகு ஏ. வி. மெய்யப்பன் அவர்கள் இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த வேதாள உலகம் படத்தில் மீண்டும் சுதர்சனம் அவர்கள் இசையமைப்பில்.........
T.R.மகாலிங்கம்,D.K.பட்டம்மாள், M.S.ராஜேஸ்வரி... பாடிய செந்தமிழ் நாடென்னும்,தீராத விளையாட்டு பிள்ளை,ஓடி விளையாடு பாப்பா,தூண்டில் புழுவினைப் போல்... போன்ற பாரதியாரின் பாடல்கள் மக்கள் மனதில் பெற்ற விடுதலையை பேணிக் காத்திடும் உணர்வையும் சமுக விழிப்புணர்வையும் விதைத்தன
பிறகு கொஞ்சம் இடைவேளைக்கு பிறகு 1961-ஆம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் ஜி.ராமநாதன் இசையமைப்பில் வெளிவந்த கப்பலோட்டிய தமிழன் படத்தில்.......
T.லோகநாதன்,Dr.சீர்காழி S.கோவிந்தராஜன், P.B.சீனிவாஸ், P. சுசிலா பாடிய என்று தணியும்,வெள்ளிப் பனிமலையின்,காற்றுவெளியிடை கண்ணம்மா......போன்ற பாரதியாரின் தேசபக்தி பாடல்களும் காதல் பாடல்களும் திரையிசைப் பாடல்களாக வெளிவந்தன
பிறகு நீண்ட காலத்திற்குப் பிறகு 1982 ஆம் ஆண்டு கே. ஹரிகரனின் இயக்கத்தில் வெளிவந்த ஏழாவது மனிதன் படத்தில் L.வைத்தியநாதன் இசையமைப்பில்............
K.J.யேசுதாஸ்,B.நீரஜா,ராஜ்குமார்பாரதி,S.P.பாலசுப்ரமணியம்
சாய்பாபா,P. சுசிலா பாடிய காக்கைச் சிறகினிலே,வீணையடி நீ எனக்கு, நல்லதோர் வீணை, அச்சமில்லை,நெஞ்சில் உரமுமின்றி,ஓடி விளையாடு பாப்பா, மனதில் உறுதி வேண்டும்,செந்தமிழ் நாடென்னும்.....போன்ற பாரதியாரின் பாடல்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப திரையிசையில் கேட்பவர் உள்ளங்களில் இன்ப உணர்வை உண்டாக்கின
மேலும் நிறைய திரைப்படங்களில் பாரதியாரின் பாடல்கள் பாரத சமுதாயம்( வாழ்க்கை), மாதர் தம்மை ( பெண்),கொட்டு முரசே( ஓர் இரவு),எங்கிருந்தோ வந்தான்( படிக்காத மேதை),சிந்துநதியின்( கை கொடுத்த தெய்வம்) , சுட்டும் விழிச்சுடர்தான் ( கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்),சின்னசிறு கிளியே கண்ணம்மா(நீதிக்குத்தண்டனை) திரையிசையுடன் இனிமையாக பயன்படுத்தப்பட்டுள்ளன
இவை எல்லாவற்றுக்கும் உச்சமாக ஞானசேகரன் இயக்கத்தில் நம் கண்முன் உயிரோட்டமாக பாடிக்கொண்டே உலா வர ஆரம்பித்தார் பாரதியார்......
பாரதி என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைப்பில்....
மெட்டுக்கு பாட்டு எழுதாத அவரது பாடல் வரிகள் காலத்திற்கு ஏற்றவாறு விதவிதமான மெட்டுக்களில் இன்றும் நம் காதுகளில் தேனிசையாகா பாய்கின்றன
ஆனால் அய்யோ பாவம்....
இன்று நம் மகாகவி பாரதியார் உயிரோடு இருந்து சினிமாவுக்கு பாடல்கள் எழுதியிருந்தால்.....
அவருக்கு கோடம்பாக்கத்தில் ஒரு பெரிய பங்களா வீடு இருந்திருக்கும் அவரது மனைவி பெயரில் ஒரு திருமண மாளிகை கட்டியிருப்பார் எட்டயபுரத்தில் காணிநிலம் அல்ல காற்றோட்டமாக பல ஏக்கர் கணக்கில் பண்ணை வீடு கட்டியிருப்பார்
மத்திய காவி மந்திரிகளுக்கு காவடி எடுத்து சாகித்திய விருது முதல் பல சாக்....கடை விருதுகள் வரை வாங்கி குவித்திருப்பார்
thanks some source from wiki and videos from YouTube
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....ஆயினும் அவரது இறை உணர்வு,தேச உணர்வு, விடுதலை வேட்கை,சமூக எழுச்சி,காதல் பாடல்கள் பல திரையிசைப் பாடல்களாக இன்றும் நம் இதயங்களை வருடுகின்றன
ஜனவரி 12, 1947 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் அடையும் தருவாயில் ஏ. வி. மெய்யப்பன் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த நாம் இருவர் திரைப்படத்தில்சுதர்சனம் அவர்கள் இசையமைப்பில்.........
T.R.மகாலிங்கம்,D.K.பட்டம்மாள், T.S.பகவதி,தேவநாராயணன்...பாடிய விடுதலை விடுதலை,ஆடுவோமே, வெற்றி எட்டுதிக்கும்,சோலைமலர், வாழிய செந்தமிழ்...போன்ற பாரதியாரின் பாடல்கள் மக்கள் மனதில் பெரிய விடுதலை ஏக்கத்தையும் தாக்கத்தை உருவாக்கின
மீண்டும் சுதந்திரத்திற்குப் பிறகு ஏ. வி. மெய்யப்பன் அவர்கள் இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த வேதாள உலகம் படத்தில் மீண்டும் சுதர்சனம் அவர்கள் இசையமைப்பில்.........
T.R.மகாலிங்கம்,D.K.பட்டம்மாள், M.S.ராஜேஸ்வரி... பாடிய செந்தமிழ் நாடென்னும்,தீராத விளையாட்டு பிள்ளை,ஓடி விளையாடு பாப்பா,தூண்டில் புழுவினைப் போல்... போன்ற பாரதியாரின் பாடல்கள் மக்கள் மனதில் பெற்ற விடுதலையை பேணிக் காத்திடும் உணர்வையும் சமுக விழிப்புணர்வையும் விதைத்தன
பிறகு கொஞ்சம் இடைவேளைக்கு பிறகு 1961-ஆம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் ஜி.ராமநாதன் இசையமைப்பில் வெளிவந்த கப்பலோட்டிய தமிழன் படத்தில்.......
T.லோகநாதன்,Dr.சீர்காழி S.கோவிந்தராஜன், P.B.சீனிவாஸ், P. சுசிலா பாடிய என்று தணியும்,வெள்ளிப் பனிமலையின்,காற்றுவெளியிடை கண்ணம்மா......போன்ற பாரதியாரின் தேசபக்தி பாடல்களும் காதல் பாடல்களும் திரையிசைப் பாடல்களாக வெளிவந்தன
பிறகு நீண்ட காலத்திற்குப் பிறகு 1982 ஆம் ஆண்டு கே. ஹரிகரனின் இயக்கத்தில் வெளிவந்த ஏழாவது மனிதன் படத்தில் L.வைத்தியநாதன் இசையமைப்பில்............
K.J.யேசுதாஸ்,B.நீரஜா,ராஜ்குமார்பாரதி,S.P.பாலசுப்ரமணியம்
சாய்பாபா,P. சுசிலா பாடிய காக்கைச் சிறகினிலே,வீணையடி நீ எனக்கு, நல்லதோர் வீணை, அச்சமில்லை,நெஞ்சில் உரமுமின்றி,ஓடி விளையாடு பாப்பா, மனதில் உறுதி வேண்டும்,செந்தமிழ் நாடென்னும்.....போன்ற பாரதியாரின் பாடல்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப திரையிசையில் கேட்பவர் உள்ளங்களில் இன்ப உணர்வை உண்டாக்கின
மேலும் நிறைய திரைப்படங்களில் பாரதியாரின் பாடல்கள் பாரத சமுதாயம்( வாழ்க்கை), மாதர் தம்மை ( பெண்),கொட்டு முரசே( ஓர் இரவு),எங்கிருந்தோ வந்தான்( படிக்காத மேதை),சிந்துநதியின்( கை கொடுத்த தெய்வம்) , சுட்டும் விழிச்சுடர்தான் ( கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்),சின்னசிறு கிளியே கண்ணம்மா(நீதிக்குத்தண்டனை) திரையிசையுடன் இனிமையாக பயன்படுத்தப்பட்டுள்ளன
இவை எல்லாவற்றுக்கும் உச்சமாக ஞானசேகரன் இயக்கத்தில் நம் கண்முன் உயிரோட்டமாக பாடிக்கொண்டே உலா வர ஆரம்பித்தார் பாரதியார்......
பாரதி என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைப்பில்....
- நிற்பதுவே நடப்பதுவே ( பாடியவர் :ஹரிஷ் ராகவேந்திரா)
- கேளடா மானிடவா ( பாடியவர் :ராஜ்குமார் பாரதி)
- நின்னைச்சரண் ( பாடியவர்கள் :இளையராஜா,பாம்பே ஜெயஸ்ரீரி )
- பாரத சமுதாயம் ( பாடியவர் :K.J.யேசுதாஸ் )
- எதிலும் இங்கு ( பாடியவர் : மது பாலகிருஷ்ணன் )
- வந்தேமாதரம் ( பாடியவர் : மது பாலகிருஷ்ணன் )
- அக்கினி குஞ்சு ( பாடியவர் :K.J.யேசுதாஸ் )
- நல்லதோர் வீணை ( பாடியவர்கள் :மனோ,இளையராஜா )
- நின்னைச் சரணடைந்தேன் ( பாடியவர் :இளையராஜா )
மெட்டுக்கு பாட்டு எழுதாத அவரது பாடல் வரிகள் காலத்திற்கு ஏற்றவாறு விதவிதமான மெட்டுக்களில் இன்றும் நம் காதுகளில் தேனிசையாகா பாய்கின்றன
ஆனால் அய்யோ பாவம்....
இன்று நம் மகாகவி பாரதியார் உயிரோடு இருந்து சினிமாவுக்கு பாடல்கள் எழுதியிருந்தால்.....
அவருக்கு கோடம்பாக்கத்தில் ஒரு பெரிய பங்களா வீடு இருந்திருக்கும் அவரது மனைவி பெயரில் ஒரு திருமண மாளிகை கட்டியிருப்பார் எட்டயபுரத்தில் காணிநிலம் அல்ல காற்றோட்டமாக பல ஏக்கர் கணக்கில் பண்ணை வீடு கட்டியிருப்பார்
மத்திய காவி மந்திரிகளுக்கு காவடி எடுத்து சாகித்திய விருது முதல் பல சாக்....கடை விருதுகள் வரை வாங்கி குவித்திருப்பார்
அடடே...பாரதியின் வீரம்,விவேகம்,நேசம்,பாசம், காதல்...அத்தனையும் முகத்தில்......... pic.twitter.com/vkxrh0UKe1
— சிந்தனைவியாதி (@PARITHITAMIL) December 11, 2014
thanks some source from wiki and videos from YouTube
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |