google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டர் தத்துவங்கள்

Tuesday, November 11, 2014

ட்விட்டர் தத்துவங்கள்


டிவிட்டர்களில் நிறைய பேர்  140-வார்த்தைகளில்
வீரிய (க)விதைகளாய் தத்துவத்தை விதைக்கின்றார்கள்
அவைகள் சில இங்கே காண்போம்......
கல்லிலிருந்து விடுதலைப் பெற்ற சிலையொன்று 
கோயிலில் சிறை வைக்கப்பட்டுள்ளது 
சகல மரியாதைகளுடன்.......................

காக்கைச் சித்தர்@vandavaalam
நிர்வாகத்தின் அட்டூழியங்களை எதிர்த்து 
போராடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தனர் ஊழியர்கள். 
அதற்குள் இடைவேளை மணி அடித்துவிட்டது


நீர் வற்றியதால் 
குளத்தைவிட்டு விலகிடும் கொக்குகள் போல, 
வறுமை வந்தவன் வீட்டிற்கு 
வர வெறுக்கும் சொந்தங்கள். #அனுபவம்

உனக்குள் மட்டுமே 
உன் கவலைக்காக அழு.
வெளியில் அழாதே..
உன் அழுகை 
உன்னை நேசித்தவர்களையும் அழ வைக்கும்.

பணம் கொடுத்து வாங்கிய எதுவும் 
வாங்கியவர்களுக்கு அடிமைதானே?,
நீ மட்டும் ஏன் முரணாக இருக்கிறாய்,
வரதட்சினை வாங்கிய கணவனே!

கருணை மலர் @karunaiimalar 
ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்படாத 
எந்த திறமையும் மதிக்கப்படுவதில்லை!!!



'இந்த உலகமே முடிந்துவிட்டது' 
என ஒரு கம்பளிப்பூச்சி நினைக்கும் தருணம், 
ஒரு அழகான பட்டாம்பூச்சியின் ஆரம்பம்.



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1