மழைக்காலம் வந்துவிட்டால் ட்விட்டர்,முகநூல்....சமுக வலைதளங்களில் மழை சிலநேரங்களில் கவிதையாகவும் சில நேரங்களில் நகைச்சுவையாகவும் பொழியும்
இங்கே கொஞ்சம் ட்விட்டர்கள் மழையில்
✍ மழலை™
இந்த மழை நனைக்கும் என்னவள் கரைந்து போகுமோ அவள் தலையில் இருக்கும் களிமண்
வாழவந்தான்
@Iam_SuMu
குண்டும் குழியான மழைநேர சென்னை சாலையில் வண்டியில் செல்லும் பெண்கள் கூவத்து நீரில் நீந்திச்செல்லும் வாத்துகளை நினைவுறுத்துகின்றனர்!
என்னை அறிந்தவன்
@Paasakkaran
உன் நினைவுகளைப்போல
மழையும் விடுவதாய் இல்லை
கனியன்
@Kaniyen
பகலில் பெய்தால் ஃபேஸ்புக்கில் கவிதை எழுதி கொலையாக் கொன்னுருவாங்கன்னு பயந்துதான் எல்லோரும் தூங்கும்போது வந்து செல்கிறது, மழை!
ராதா இல்லாபடம் சாதா!
@RATHA_RADHA
இந்த சென்னை மா நகரத்தில்
மழை சவட்டி எடுக்குதுங்கோ
சரி நமக்கு சளி புடிக்காம இருக்கனும்ல
என்ன நா சொல்றது
மேகத்தை துரத்தினவன்
@iam_sihva
குடைபிடிப்பதற்கு பதிலாய் உன் கை பிடித்தேன் இருவரும் நனைந்தோம் அன்பு மழையில்
ஆன்டனி
@MaGeShAnToNy
மனிதனிடம் ஈரம்
வரண்டு விடும் என்ற
பயத்தில் இயற்கை
தரும் வரம் வான் மழை ....!!!!
கோட்டி
@shanth_twits
மழையினைக் குறித்து கவலை கொள்வதாயில்லை..!
தினம் நீ கடந்து செல்லும் நிழலில் இளைப்பாற கற்றுக்கொண்டன என் முற்றத்து மரங்கள்..!
வெங்கி ♂
@VenkysTwitts
ஜோலார்பேட்டை: மழை வேண்டி கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் - செய்தி
#அப்படியே ஹனிமூனுக்கு ஆஸ்திரேலியா அனுப்பி வைங்க !
வாயாடி;))
@dinesh_tdk
மழைக்கு பிறகு மழைநீர் சாலையில் இருந்து சாக்கடைக்கு சென்றால் வெளிநாடு...
சாக்கடையில் இருந்து சாலைக்கு பொங்கினால் தமிழ்நாடு...
#ப.பி.
Susi
@suseelaamar
இவள் பாதத்தினால் கோலம் போடுவதற்கு
தேங்கினேன் குளமாக...மழை
வசந்த் குமாரி @vasanth_kumari
வசந்த் குமாரி
ஜலதோஷம் பிடிக்கிறது…
என்றாலும்,
மழையில் குழந்தையைப்
போல் நனைவதே பிடிக்கிறது!!!!
எனக்கும்.!!!!!!
anbudan BALA|எஅ.பாலா
@AmmU_MaanU
ஒரு மணிநேரம் பெய்யும் மழையில், சென்னை நகரெங்கும் உருவாகும் அழகிய குளம்/குட்டைகள், இந்தியா வல்லரசு தான் என்பதை அறிவிக்கின்றன
Selva
@SelvaSRT
இப்புடியே ஜன்னல் ஓரம் உக்காந்து எவ்வளவு மழைத்துளி இந்த ஏரில விழுதுனு எண்ணிட்டு இருக்கலாம் போல !!!
சன்னியாசி
@iam_moorthy
மழைக்கு ஸ்கூல் பக்கம் ஒதுங்காம எங்க வீட்லையே ஒதுங்கிட்டன்..
மரங்களை நடுங்க.....மழை வரட்டும்
அப்படியே சீமை கருவேல மரங்களையும் புடுங்குங்க...
நீர் வளம் தங்கட்டும்
— சிந்தனைவியாதி (@PARITHITAMIL) November 4, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |