google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சிந்தனைத் துளிகள்

Saturday, November 22, 2014

சிந்தனைத் துளிகள்


மிகவும் சுருக்கமாகவும் எளிதில் மறக்க முடியாத எளிய வார்த்தைகளிலும் பேசப்படும் அல்லது எழுதப்படும் சிந்தனைத் துளிகள் படிப்பவர்களின்  சிந்தனையைத் தூண்டி களிப்படையச் செய்யும்......

தமிழ் மொழியில் பழமொழிகள்,நீதி மொழிகள்..இத்தகைய சிறப்புக்களை  பேச்சுவழக்கில் கொண்டிருந்தன உலகில் தமிழ்தான் இந்த சிந்தனைத் துளிகளின் பிறப்பிடமாக இருந்திருக்க வேண்டும் 
-அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
-அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
-அரசனை நம்பி புருசனை கைவிடாதே
-ஆனைக்கும் அடிசறுக்கும்.
-இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இப்படி தமிழ் மொழியில் உள்ள மனதை தைக்கும் சுருக் வார்த்தைகள் அதிகம் 

உலகில் உள்ள மொழிகளிலேயே தமிழ் மொழியில் மட்டுமே முழுவதுமாக இத்தகைய "சுருக்" வார்த்தைகளை கொண்ட இலக்கியங்களும்  முதன் முதலாக தோன்றின என்பர் தமிழ் அறிஞர்கள் 

ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் இதுபோன்ற "சுருக்" வார்த்தைகளை கொண்ட வாக்கியங்களால் அமைத்த உலகின் முக்கியமான  முதல் இலக்கியமாக இருக்கும் 
1.அறம் செய விரும்பு
2. ஆறுவது சினம்
என்று தொடங்கும் ஆத்திச் சூடியில் இருக்கும்  "சுருக்" வார்த்தைகள் உள்ள வாக்கியங்கள் இந்த உலகைப் புரட்டிப் போடும் நெம்புகோல் சிந்தனைகளாகும் 

கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் இதுபோன்ற எளிய வார்த்தைகளைக் கொண்ட பாக்களால் எழுதப்பட்ட உலகின் முதல் இலக்கியம் என்ற பெருமையும் உண்டு 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

என்று முதல் குறள்பாவிலேயே நெற்றியடியாக அடித்தவர் வள்ளுவர்

இது போல் எண்ணற்ற புலவர்களும் கவிஞர்களும் தமிழ் மொழியில் உண்டு அவர்கள் தங்கள் பாடல்கள்,கவிதைகள்,கட்டுரைகள், நாவல்கள்,கதைகள்... போன்றவைகளில் இடையிடையே அன்றும் எழுதினார்கள் இன்றும் எழுதுகிறார்கள் 

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
.............என்று 

அன்று சங்ககாலப் புலவர்களில் ஒருவரான கணியன் பூங்குன்றனார் முதல்.......

வானம் வலது கையில்,
பூமி இடது கையில்,
வாழ்வே நமது பையில்!
..........என்று 

இன்று லிங்கா படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய ஒ நண்பா....ஏ நண்பா பாடலில் வரும் வார்த்தைகளும் அடங்கும் 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1