google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டர் ஞானிகள்

Sunday, November 23, 2014

ட்விட்டர் ஞானிகள்


ட்விட்டர் உலகத்தில் ஒரு சில வார்த்தைகளால் படிப்பவர்களை பரவசப்படுத்தும் சில ட்விட்டர் ஞானிகள் உண்டு.......
சில நல்ல டிவிட்களை காலக்கரையான் அழித்துவிடக்கூடாது என்பதற்காக இங்கே பதிவிடப்படுகிறது   

KalaignarKarunanidhi @kalaignar89  

துரோகிகள் கோழைகளாக இருப்பார்கள்; ஆனால் கோழைகள் எல்லாருமே துரோகிகளாக இருக்கமாட்டார்கள்.


பட்டதாரி அடிகள்@pattuTwits 
கோயில்'ல பிச்சை எடுக்குரவன் ! உன் ஜாதி'காரன்னு தெரிஞ்சா! கூட்டுட்டு போய் சொத்துல பாதி'ய எழுதியா தர போற! அப்புரம்எதுக்குடா உனக்குஜாதி வெறி!
B➕ve நான் SP ஓடைமீன்@NaanSp 
ரஜினி என்பார் கமல் என்பார் ஆயிரம் வலிகளை நெஞ்சில் சுமந்தும் துளி கண்ணீர் சிந்தாமல் விரைப்பாய் திரியும் தன் தந்தையின் நடிப்பை உணராதோர்..
ராதா இல்லாபடம் சாதா!@RATHA_RADHA 
ராவா குடிச்சவனும் ராப்பகலா படிச்சவனும் தேறுனதா பூகோளமே இல்ல so சுமாரா படிங்க சோடா ஊத்தி குடிங்க !!
பாரதி @barathi_ 
தனிமையும் உப்பும் ஒன்றே. இரண்டும், கட்டாயத்தேவை, அளவும் மிகக்கூடாது. ஆனால், நோயாளிகளுக்கும் வயதானவர்களுக்கும் தராவிட்டாலும் நல்லதுதான்!
நாடோடி @kkarthic 
குழந்தைகள் கற்று தருகிறார்கள், படிக்க நாம் போவதில்லை!
சிங்கார வேலன்@AnishBon 
மனிதனுக்கும்,நாய்க்கும் இருக்கிற ஒரே ஒரு ஒற்றுமை தன் எஜமானுக்கு மட்டும் வாலாட்டுவது!!
V.ஸ்ரீதர் @Tamil_Typist 
கடவுள் இருக்காரா இல்லையான்னு doubtல இருக்கறவன் பழனிக்கும் திருசசெந்தூருக்கும் 2 தடவை போனா பெரியார் கட்சிக்கு போயிருவான் #அடாவடித்தனங்கனள்
அப்பாவி @appaavi88 
தமிழனுக்கு தண்ணிலதான் கண்டம்ன்னு தோனுது #காவிரி,பாலாறு,முல்லைபெரியார்,டாஸ்மாக்
சஹாரா @dhanalakshmirs 
திமிராய் இருப்பவர்களை கடிந்து கொள்ள வேண்டாம்... அவர்களின் ஒரே சந்தோஷம் அதுவாக மட்டுமே இருக்கக்கூடும்.
Hasina @HasinaBaanu 
உழைக்காதவன் கூட செலவு செய்கின்றான் தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும்..!!
மீனம்மா @meenammakayal 
நாமிருவரில் யார் முதலில் இறந்தாலும் எனக்கிருக்கும் ஒரே கவலை பாதி உயிர்வைத்து காலனென்ன செய்வானென்பதே..
பல்கார்பெட்கோ @palkarbetko 
சில விசையம் கேட்டு தெரிந்துகொள்வதை விட பார்த்து தெரிந்துகொள்ளுதல் நல்லது # அம்மா நலமா 
டுவிட்டர் அரசன் @thamizhinii 
பிறந்தேன் வளர்ந்தேன் படித்தேன் சம்பாதித்தேன் கட்டிக்கிட்டேன் பெற்றேன் வளர்த்தேன் படிக்கவைத்தேன் சம்பாரித்தான் இறந்தேன் கடைசிவரை வாழவில்லை.
சிந்தனைவியாதி @PARITHITAMIL 
அனுபவம் ஒரு நல்ல வாத்தியார் போன்று... ஆனால் அந்த வாத்தியிடம் அடிவாங்கும் மாணவராகவே நம் வாழ்க்கை முடிந்துவிடுகிறது
நாட்டி நாரதர்® @mpgiri 
நமக்கு ஒரு மண்ணும் தெரியாதுனு தெரிஞ்சும்,எக்ஸாம் ஹால்ல நாம எதாவது பதில சொல்லுவோம்னு நம்மளயே பாத்துட்டுயிருக்கறவன் தான் "நண்பன்".
சன்னியாசி @iam_moorthy 
காதலித்து பார்..! தரையில கால் நிக்காது. போன்ல ஜார்ஜ் நிக்காது. பர்ஸ்ல காசு நிக்காது. ஆனா நீ மட்டும் நடு தெருவுல நிப்ப..!
#இதயம் @najath007 
விவசாயி பணம் தான் முக்கியம் என நினைத்து இருந்தால், அவன் அரிசியையும் கோதுமையயும் விளைவிப்பதற்கு பதில் கஞ்சாவைதான் விளைவிப்பான்
டேனியம்மா @meensmini 
ஒரு சுறுசுறுப்பான தாய் எப்போதும் ஒரு சோம்பேறி மகளைத்தான் உருவாக்குகிறாள்.
{ ரங்கூஸ்க்கீ } @SvmSrinivas 
கண்பொறை ஆப்ரேஷன் செய்ததும் நிறைவேறியது பாட்டியின் கூலிங் கிளாஸ் ஆசை.....!"
பொன் குழந்தை @ponkulanthai 
உணவை கண்டவுடன் அனைவரையும் அழைத்துவிட்டு உண்கிறது காக்கை இனம்! ஆனால் உண்டபிறகு மீதியிருந்தால் மற்றவரை அழைக்கும் மனித இனம்!!!
சி.பி.செந்தில்குமார் @senthilcp 
வருசம் பூரா சரக்கடிச்ட்டு சாக்கடை ஓரம் கிடப்பவன் எல்லாம் சபரி மலைக்கு மாலை போட்டதும் குருசாமி ஆகி விடுவதுதான் ஆன்மீகத்தில் அநியாயம்
nithu@nithu_ji 
ஆயாக்களின் கவனிப்பில் இருக்கும் குழந்தைகள், தலையில் ஏதெனும் அடி பட்டால், தானே அழுது, தானே தடவிக் கொண்டு அமைதி அடைந்து விடுகின்றன
ட்விட்டர்MGR @RavikumarMGR 
தனியார் வேலையில் நாம் யாரென்று நிரூபித்து கொண்டே இருக்க வேண்டும்!இல்லையேல் வேலை காலி!அரசுப்பணியில் நாம் உயிரோடிருப்பதை உணர்த்தினால் போதும்!



thanks to all tweeps...
இன்னும் நிறைய ஞானிகள் ட்விட்டர் உலகத்தில் இருக்கின்றனர் பதிவின் நீளம் கருதி.......                 இன்னும் தொடரும் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1