சாமி...பிச்சை போடுங்கையா
கேட்டவன் தட்டில்
ஒரு ருபாய் போட்டு விட்டு
உள்ளே போய்........
சாமி... காப்பாற்று அப்பா
கேட்காதவன் உண்டியலில்
பத்து ருபாய் போட்டேன்
************************************
நாட்காட்டியில்
தேதிகள் கிழிப்பது போல்....
டாஸ்மாக் கடை சரக்குகள்
நம் வாழ்க்கையை கிழிக்கின்றன
**************************************
ஆடு......எல்லோருக்கும் தெரிய
பாடு.......எல்லோருக்கும் கேட்க
காதலி....யாருக்கும் தெரியாமல்
****************************************
நம் வாழ்க்கை
நமக்கே வெறுப்பாக தெரியும்
மற்றவர்களுக்கு.........
பொறாமையாக தெரியும்
*******************************************
சிறையில் குற்றவாளிகள் சாப்பிடும் சத்தான உணவு.....
வெளியே நிறைய நிரபராதிகளுக்கு கிடைப்பதில்லை
*********************************************
எல்லோரும் சுமை மூட்டைகளுடன்தான் வருகிறார்கள்
நீ உன் சுமையை அவர்கள் மீது இறக்கி வைக்காதே
******************************************************************
நண்பர்களிடம்
நான் அன்பைத்தான் விதைக்கிறேன்
அவைகள் துரோகமாக முளைக்கின்றன
**********************************************
சரி....
இவ்வளவு நேரம் படித்தீர்களே
அத்தனையையும் மறந்துவிடுங்கள்
ஏன்? என்றால்............
நம் மண்டை குப்பைத் தொட்டி அல்ல
அடுத்தவர் சொன்னவைகளை நிரப்பி வைக்க.......
— சிந்தனைவியாதி (@PARITHITAMIL) November 29, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |