google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அரவிந்த் கெஜ்ரிவால் கைது-நடந்தது என்ன?

Wednesday, May 21, 2014

அரவிந்த் கெஜ்ரிவால் கைது-நடந்தது என்ன?

 பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதல் போனி.....கெஜ்ரிவால் கைது நடந்தது என்ன.....? டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி-கெஜ்ரிவால்  உரையாடலும் அதிரடிக் கைதும்............
   கெஜ்ரிவால் தன் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியதாக மான நஷ்ட வழக்கு தொடுத்த பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரியின் வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் வந்த போது.......

நீதிமன்றத்தில் நடந்த விசாரணை...........

நீதிபதி-கட்காரி மீது உள்ள குற்றச்சாட்டை நீங்கள் நிருபிக்க முடியுமா?

கெஜ்ரிவால்-(பதில் இல்லை)

நீதிபதி-இது ஒரு குற்றவியல் அவதூறு வழக்கு என்பதால் நீங்கள் ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் 

கெஜ்ரிவால்....முதலில் சம்மதித்தாலும் பிறகு மறுப்பு தெரிவித்தார் 

கெஜ்ரிவால்-எங்கள் கட்சி இத்தகைய சட்ட நடைமுறையை பின்பற்றாது ஆதலால் எந்தவகையான ஜாமீன் பத்திரமும் நாங்கள் தாக்கல் செய்யமாட்டோம் இது எங்கள் கட்சியின் கொள்கைக்கு ஏற்புடையது அல்ல

நீதிபதி-ப்ளீஸ்...நீங்கள் ரூ.10 ஆயிரத்துக்கான ஜாமீன் பத்திரம் செலுத்துங்கள் 

கெஜ்ரிவால்-எனக்கு எந்த வகையான ஜாமீனும் தேவை இல்லை 

நீதிபதி-சட்டத்தின் படி நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் 

கெஜ்ரிவால்-நான் ஜெயிலுக்குப் போக தயாராக இருக்கிறேன் 

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால்  23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில்  வைக்க நீதிபதியின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் 

இதைப்  படிக்கும் போது நம்ம வீர பாண்டிய கட்டபொம்மனுக்கும் ஜாக்சன் துரைக்கும் இடையில் நடந்த..........
"யாரிடம்  கேட்கிறாய் வட்டி? மானம்கெட்டவனே!.........."
வசனம்தான் நினைவுக்கு வருகின்றது 

கெஜ்ரிவால் சார் உங்க   நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதல் போனி.....கெஜ்ரிவால் கைது 

ஆனால்.....
முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்பதை மறந்துவிட்ட  அவர் ஓர் அரசியல் அப்பாவியாக இந்த உலகுக்கு காட்டுகிறது

இன்னும் சிலரின் பார்வையில் கெஜ்ரிவால் நடத்தும் நாடகங்களில் இதுவும் ஓன்று மீண்டும் மக்களிடம் அபிமானம் பெறவே இந்த நாடகம் என்போரும் உண்டு....

அதேநேரம் 
இது பாஜக கட்சியினரின் அராஜகத்தை காட்டுகிறது என்போரும் கெஜ்ரிவாலின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு என்போரும் உண்டு...



நண்பர்களே! 
அரவிந்த் கெஜ்ரிவால் கைது-அவரது நேர்மையா? நாடகமா?
 அவரது நேர்மை என்றால் இது பாஜகவின் அராஜகமா? 
உங்கள் வாக்கை அளித்து உலகுக்கு தெரியப்படுத்துங்கள் 

அரவிந்த் கெஜ்ரிவால் கைது நமக்கு சொல்வது என்ன....?


வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1