google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அய்யோ...நான் யாருக்கு ஒட்டு போடுவது?

Monday, March 10, 2014

அய்யோ...நான் யாருக்கு ஒட்டு போடுவது?

நாட்டுல  இப்படி எல்லோரும்  ரொம்ப நல்லவங்களாய் இருக்கிராயிங்களே அய்யோ... நியாயன்மார்களே நான் யாருக்கு ஒட்டு போடுறது...? 

























அம்மா உணவகம் மூலம் மலிவு விலையில் இட்லியும் சப்பாத்தியும் போட்டு  பொருளாதார புரட்சி செய்யும் தமிழ்நாட்டு முதல்வர்....
"நாளை நான் பிரதமராக வந்தால் பொருளாதாரத்தில் அடிமைப்பட்டுள்ள இந்திய நாட்டுக்கும் மக்களுக்கும் விடுதலை வாங்கித் தருவேன்"

என்று  சூளுரைகும் பசியை தீர்க்க வந்த  அட்சயபாத்திரம் அம்மாவுக்கு ஒட்டு போடவா...?






















இவர்  சுட்டுவிரலை காட்டுபவரே நாளைய பிரதமராக முடியும் என்றும் தமிழன் இழந்த உரிமையை மீட்க பிறந்த ரட்சகராக......ஆரிய அடக்கு முறையை அழிக்க வந்த திராவிட தலைவராக உலா வரும்........எங்க  தமிழினத் தலைவருக்கு ஓட்டுப் போடவா...?






















நான்  ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் இருளை விரட்டியடித்து தெருவுக்கு தெரு ஒளியை பீச்சியடிப்பேன்......களைப்படைந்தால்  எல்லோருக்கும் நமோ டீ கொடுப்பேன் என்று தெம்பாய் நெஞ்சை நிமிர்த்தும் மோடிஅய்யாவுக்கு  போடவா ஒட்டு..?























எங்கள் பத்தாண்டு சாதனைகளைப் பாரீர்....எல்லோருக்கும் ஆதர்ஷ் அட்டை கொடுத்து இந்தியன் என்ற அடையாளத்தை மீட்டு தந்த.......எங்களுக்கே வாக்களியுங்கள் என்று சொல்லும் காங்கிரஸ்க்கு ஓட்டுப் போடவா...?




















ஊழல்-லட்சம்-லாவண்யத்தை ஒழிப்பேன் என்று வித்தை காட்டும் ஆம் ஆத்மிகாரங்களுக்கு ஓட்டுப் போடவா....?



இப்படி  எல்லோரும் நல்லவியிங்ககளாக....ரொம்ப நல்லவியிங்களாக இருக்கிறாயிங்களே..........
அய்யா நியாயன்மார்களே! நான் யாருக்கு ஒட்டு போடுவது...........?

பின் குறிப்பு-அண்ணேன்...நான் இதுவரை ஒட்டு போட்டவங்க யாரும் ஜெயிச்சதில்ல....இந்த தடவையாவது ஜெயிக்கிற கட்சி எதுன்னு சொல்லுங்க...........



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1