அஸ்ஸாமில் ராகுல்காந்திக்கு முத்தமிட்ட பெண் படுகொலை செய்யப்பட்ட செய்தி....எதைக் காட்டுகின்றது? ராகுலை முத்தமிட்ட பெண் மரணம்-யார் மேல் குற்றம்? கருத்துக்கணிப்பு
திருமணம் ஆன ஒர் இளம் பெண்மணி தன் அரசியல் கட்சியில் உள்ள இளந் தலைவர் ராகுலை பொது இடத்தில் முத்தமிட்ட செயல்..அநாகரீகமானது.
இது அவளது அறியாமையைக் காட்டுகின்றது
அதேநேரம்.....
மேலை நாடுகளிலும் ஏன் இங்கேயும் மேல்தட்டு மக்கள் பிரபலங்கள் சந்திக்கும் பொது ஆண்-பெண் ஒருவர் ஒருவரை முத்தமிட்டுக் கொள்வது... இன்றைய நாகரீக வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் இது தவறான செயலா...? ஒரு அரசியல் குடும்ப பாசவுனர்வாகக்கூட இருக்கலாம்
தன் மனைவியை ஒரு கட்சி மகளிர் அணியில் இடம்பெற அனுமதித்தப பின்பும் இச்செயலை விபரீதமாக எடுத்துக்கொண்ட அவளது கணவனின் முட்டாள்தனம் என்று சொல்வதா...?
அல்லது தன் மனைவியின் இச்செயலால் மானம் போனதாகக் கருதி மனைவியையும் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற கவரிமான் கணவன் என்று அவனை பாராட்டுவதா...?
தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் ராகுல் காந்தி மகளிர் அணி பெண்களை தன் அருகில் மிகவும் நெருக்கமாக வரவிட்டது நாகரீகமற்ற செயலா...? இந்த முத்தம் சம்பவமும் அதனால் ஏற்பட்ட கொலையும் நடக்க ராகுல் காரணமா?
அதேநேரம்...கொலை செய்யப்பட்ட பெண் முத்தமிட்ட பெண் அல்ல என்று மறுக்கும் அஸ்ஸாம் காவல்துறை......நல்லது....நாளை இப்படியொரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் அய்யா....
சரி...அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால்........யார் மேல் குற்றம்...?
ராகுலை முத்தமிட்ட பெண் மரணம் என்றால் -யார் மேல் குற்றம்?
வாக்களித்து உண்மையை உலகுக்கு சொல்லும் அனைவருக்கும் நன்றி...........முடிவு-8/3/2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |