பாலியல் பலாத்காரத்திற்கு காரணம் பெண்களின் உடையும் நடையும்தான் என்று மகாராஷ்டிரா மாநில மகளிர் கமிஷன் உறுப்பினர் ஆஷா மிர்ஜே அதுவும் ஒரு பெண்மணியே இப்படி கூறியது சர்ச்சையானதும் அவர் மன்னிப்பு கேட்டதும் நாம் அறிவோம்.......
இன்னொரு மும்பை பத்திரிகையாளர் இளம் பெண் மாலை 6 மணிக்கு மேல் தன் ஆண் உதவியாளருடன் ஒதுக்குப் புறமான இடத்திற்கு போனது ஏன்...? என்றும்...............கேள்விகள் எழுப்பி பாலியல் பலாத்காரத்திற்கு காரணம் பெண்களின் உடையும் நடையும் கூந்தல் அலங்காரமும்தான் என்று கூறினார்
சமுதாயத்தில் உயர் நிலையில் உள்ள இவர்கள் போன்ற ஆண்களும் பெண்களும் இது போன்ற கருத்துக்களைச் சொல்வதும் பின்பு மன்னிப்பு கேட்பதும் நாட்டில் சகஜமான ஒன்றாகிவிட்டது
அரசியல்வாதிகளும் சமுதாய பிரபலங்களும் நீதிமான்களும் இதற்கொரு சரியான தீர்வு செய்யாமல்...இப்படி ஒவ்வொரு நிகழ்வுகள் நடக்கும் போதும் அது சமுதாயத்தில் பிரச்சனையும் போராட்டங்களும் உருவாகும்போது மட்டுமே பெயரளவில் நடவடிக்கை எடுப்பது...........
பெண்கள் சுதந்திரம் பற்றி..........கவிஞர்கள் கவிதை எழுதுவார்கள் எழுத்தாளர்கள் திகில் நாவல் எழுதுவார்கள் சினிமாவாதிகள் படம் எடுப்பார்கள் அரசியல்வாதிகள் ஆலோசனை செய்வார்கள் பெண்கள் அமைப்பு போராட்டம் நடத்துவார்கள்....இதைத் தவிர நாட்டில் எதுவும் தீர்வு இல்லை
நள்ளிரவில் ஆபரணங்கள் அணிந்து கொண்டு ஒரு பெண் என்று சுதந்திரமாக நடமாடுகின்றாளோ அன்றே நாடு சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம் என்று மகாத்மா கனவு கண்டது........
அவர் களவாணிப் பசங்கள மனசுல நினைச்சி சொல்லியிருப்பாரோ....? அப்போது பாலியல் வன்கொடுமை இல்லையோ...?
என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது
உண்மையில் பாலியல் பலாத்காரத்திற்கு யார் காரணம்?
ஒருவர் எத்தனை காரணிகளுக்கும் வாக்களிக்கலாம் வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........முடிவு-8/2/2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |