இங்கே என் எண்ணச் சிதறல்கள் கவிதைகளாய்....அவைகள் எதுவும் சொல்லாது தத்துவங்களாய்...வாசிக்கவும் நேசிக்கவும் சும்மா நேரப்போக்குக் கவிதைகள்.........
எழுந்து வரும் அலைகள்
எதையோ சொல்லிச் செல்கின்றன
கலைந்து போன கனவுகள்
நீலப்பறவைகளின்
கவியரங்கம் ஆரம்பம்
அலறி ஓடின... மேகங்கள்
மார்கழி குளிர் காற்று
மூங்கில்களின் முனங்கல்
மரத்துப் போனது குரல்வளை
பார்வையில் பட்டது
சிரிக்கும் மலர்கள்
படபடக்கும் பட்டாம்பூச்சிகள்
பரணில்
செல்லரித்த புத்தகங்கள்
கரையான்கள் படித்துவிட்டன
நள்ளிரவு நிலவில்
முகம் பார்த்த மீன்கள்
உதட்டுச் சாயம் பூசிக்கொண்டன
புழுதி மண் மீது
படிந்த மழைத்துளிகள்
அரைவேக்காடு ஓவியனின்.....
யுத்தம் முடிந்து விட்டது
எதிரிகள் எவருமில்லை
காலியானது எங்கள் கூடாரம்
அளவுக்கு அதிகமாக
அலைகள் தள்ளாடின
அவள் குளித்து முடித்தாள்...
கடல் நீரை
கைகளில் அள்ளினேன்....
உலகம் உள்ளங்கையில்
அந்தக் கரப்பான் பூச்சிக்கூட
அமைதியாக இருக்கும் போது
அழகாகத் தெரிகின்றது
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....எதையோ சொல்லிச் செல்கின்றன
கலைந்து போன கனவுகள்
நீலப்பறவைகளின்
கவியரங்கம் ஆரம்பம்
அலறி ஓடின... மேகங்கள்
மார்கழி குளிர் காற்று
மூங்கில்களின் முனங்கல்
மரத்துப் போனது குரல்வளை
பார்வையில் பட்டது
சிரிக்கும் மலர்கள்
படபடக்கும் பட்டாம்பூச்சிகள்
பரணில்
செல்லரித்த புத்தகங்கள்
கரையான்கள் படித்துவிட்டன
நள்ளிரவு நிலவில்
முகம் பார்த்த மீன்கள்
உதட்டுச் சாயம் பூசிக்கொண்டன
புழுதி மண் மீது
படிந்த மழைத்துளிகள்
அரைவேக்காடு ஓவியனின்.....
யுத்தம் முடிந்து விட்டது
எதிரிகள் எவருமில்லை
காலியானது எங்கள் கூடாரம்
அளவுக்கு அதிகமாக
அலைகள் தள்ளாடின
அவள் குளித்து முடித்தாள்...
கடல் நீரை
கைகளில் அள்ளினேன்....
உலகம் உள்ளங்கையில்
அந்தக் கரப்பான் பூச்சிக்கூட
அமைதியாக இருக்கும் போது
அழகாகத் தெரிகின்றது
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |