கவிதை,கதை,நாடகம்,நாவல்கள்...போன்ற இலக்கியங்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? அந்த காலத்திலேயே தத்துவஞானி பிளாட்டோ மக்கள் மீது இலக்கியத்தின் தாக்கம் பற்றி சொன்னது சரியா....?
மேலைய நாடுகளில் அது எப்படியோ இங்கே இந்தியாவில் அவரது வாக்கு காலங்காலமாக காவியங்கள் மக்களை பகுத்தறிவு சிந்தனை இன்றி கடவுள் என்ற கயமைதனத்தில் மூழ்கடித்துவிட்டது
இன்றும் இவர்கள் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பும் போதுகூட விஞ்ஞானத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு மெஞ்ஞானத்தை தலையில் சுமந்துகொண்டு தேங்காய் உடைத்து பூஜை போடும் அளவுக்கு......இலக்கியங்களில் தாக்கம்
சுமார் அம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த கலைகள்...கணியன் கூத்து,வில்லுப்பாட்டு,தோல்பாவை கூத்து,ஒயிலாட்டம்,பொய்க்கால் குதிரை,மயிலாட்டம்,விடிய விடிய நடைபெறும் பக்தி நாடகம்...இப்படி நிறைய கலைகளை சினிமா அழித்துவிட்டது....ஆனால் அந்த சினிமாவையும் அழிக்கும் ஒரு சாதனம் வந்துவிட்டதை நாம் அறிவோம்
அப்படித்தான் கவிதை,கவிதை நாடகம், காவியம்,தொடர் நாவல்கள்,பெரும் கதைகள்,சிறு கதைகள்...எல்லாம் அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டன இப்போதைய ட்விட்டர்,முகநூல்,இணையம்... போன்ற விஞ்ஞான முன்னேற்றம் இவைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடித்துக் கொண்டிருக்க...இந்த அதிவேக உலகில் இன்னும் அதிநவீன தொழில்நுட்பங்கள் ஐ-போன்,டேபிலேட்..போன்றவைகள் வரவு இந்த இலக்கிய வியாதிகளுக்கு முடிவுகட்டும்
ஆனால் இந்த அழிவை எந்தத் தலைமுறையும் நேரிடையாக காணாது இவைகளை அழிப்பதற்கு என்று இன்னொரு தலைமுறை வரும்
இன்றைய காலகட்டத்தில்கூட நிறைய நாவல்கள் எழுதி குவித்த சிறந்த நாவல் ஆசிரியர் ஒருவர் இப்போது எதையும் எழுதுவதில்லை இப்படி நிறைய இலக்கியவாதிகள் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள் இதுவே இலக்கியத்தின் எதிர்காலத்திற்கு சான்று இதை மறந்து இன்று சில இலக்கியவாதிகள் வாசகர் வட்டம் என்று சில அறிவுஜீவிகளை விட்டில் பூச்சிகளாக வெளிச்சம் காட்டி விழுங்கிக்கொண்டு இருக்கின்றார்கள்....
இதனால் எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்வது....நான் இலக்கியவாதிகளுக்கு எதிரானவன் அல்ல....நானும் இலக்கியத்தில் முதுகலை பட்டம் படித்தவன்தான் ஆனால் இந்த இலக்கியங்களும் இலக்கியவாதிகளும் இந்த சமுதாயத்திற்கு செய்த நன்மைகள் எதுவும்
இல்லை.......
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்...படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்பது பழமொழி சிந்தித்துப் பார்த்தால் இலக்கியங்கள் எழுதியவன் நாட்டைக் கெடுத்தான்...இலக்கியங்கள் படைத்தவன் படிப்பவனின் வயிற்றுப் பாட்டைக் கெடுத்தான் என்பதே புதுமொழி
இப்போது இலக்கிய உலகில் நடக்கும் இருண்ட யுத்தமும் போலியான பந்தாக்களும் அநாகரீக வார்த்தை வீச்சுக்களுமே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |