இன்று சினிமாவியாதிகளின் பன்ச் வசனங்கள் நம்மைப் பாடாப்படுத்துகின்றன போழுதுபோக்குத்தானே என்பதையும் தாண்டி நம்மை நாசம் செய்கின்றன ஒரு மாற்றத்திற்காக அன்றைய மெஞ்ஞானிகளும் விஞ்ஞானிகளும் வாழ்க்கை பற்றி சொன்ன சில பன்ச் வசனங்கள்.......
எண்ணி எண்ணி
கலங்காதே
நாளை நடப்பதை
எண்ணி எண்ணி
கனவு காணாதே
இன்று நிகழ்வதை
எண்ணி எண்ணி
கவனம் கொள்....
சொன்னது நானல்ல....
மெஞ்சானி-புத்தர்
சென்று கொண்டே இருக்கும்
இந்த மூன்று வார்த்தைகளே
வாழ்க்கையைப் பற்றி
முழுமையாகச் சொல்லும்
சுருக்கமாகவும் சொல்லும்
சொன்னது நானல்ல.....
கவிஞர்-ராபர்ட் பிராஸ்ட்
சோகத்தின் தாக்கம்
உங்களைத் தாக்கிட
அனுமதிக்காதீர்கள்
நீங்களின்றி
இன்னொன்று
இன்னொருவர் ...
உங்கள் வாழ்வை
தீர்மானிக்க முடியாது
சொன்னது நானல்ல.....
தத்துவஞானி-ஹார்வி பியர்ச்டின்
அறிவுஜீவிகளுக்கு
ஒரு கனவு
முட்டாள்களுக்கு
ஒரு விளையாட்டு
பணக்காரர்களுக்கு
ஒரு நகைச்சுவை
ஏழைகளுக்கு
என்றும் சோகம்
சொன்னது நானல்ல
சொலோம் அலைசம்
ஒரு பரிசோதனை
நீங்கள்
வெற்றியடைய
செய்யவேண்டும்
நிறையப் பரிசோதனைகள்
சொன்னது நானல்ல.........
கவிஞர்-எமர்சன்
வாழ்க்கை-ஒரு பாடல்
அதைப் பாடிடு....
வாழ்க்கை-ஒரு விளையாட்டு
அதை விளையாடிடு.....
வாழ்க்கை-ஒரு கனவு
அதை உணர்ந்திடு .....
வாழ்க்கை-ஒரு தியாகம் '
அதை வழங்கிடு....
வாழ்க்கை-ஓர் அன்பு
அதை அனுபவி......
சொன்னது நானல்ல........
சாய் பாபா
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |