சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பல கோடிக்கு வியாபாரம் என்று செய்தியைக் கேள்விபட்டு...அடடா நாம் முட்டாள்தனமாக அதை நையான்டி செய்து எழுதிவிட்டோமே என்ற ஆழ்ந்த கவலையில்....
அடுத்த புத்தகக் கண்காட்சியில் நாமும் ஒர் எழுத்தாளராகப் பிறப்பெடுத்து கோடி இல்லாவிட்டாலும் சில ஆயிரங்களாவது சம்பாதிக்க அருள் புரிவாய் எழுத்துக் கடவுளே! என்று எழுதிய முதல் சிறுகதை.......
இரண்டு போலிஸ்காரர்களை இழுத்துக்கொண்டு ஒருபோலிஸ் நாய் வந்தது அங்கும் இங்கும் மோப்பம் பிடித்த அந்த நாய் அறையின் உள்ளே நுழைந்து அந்தப் பெட்டியை மோப்பம் பிடித்தது............... (என்னடா இது பெரிய திகில் நாவலாக இருக்குமோ? என்று நினைத்து யாரும் பயந்து பாதியில் விட்டு ஓடிவிடாதீர்கள் அய்யா....)
நான் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் போது நடந்த சம்பவம் . அன்று காலை நாங்கள் வகுப்புக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் போது பக்கத்து அறையில் கூப்பாடு....டேய் என் செயின காணலடா....என் சக விடுதி மாணவர் விருதுநகர் பருப்பு வியாபாரி மகன் தன் தொப்பை வயிற்று தொப்புளுக்கும் கீழ் தொங்கி க்கொண்டிருக்கும் பத்து பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லை என்று
அறைக்கு மூன்று மாணவர்கள் என்று தங்கியிருக்கும் இருபது அறைகள் உள்ள அந்தப் புதிய விடுதியில் பொதுவாக இரவில் காற்றோட்டத்துக்காக அறைக் கதவுகளை நாங்கள் யாரும் அடைப்பதில்லை நிறைய மாணவர்கள் இரவில் அறைவாசலில்தான் படுத்திருப்போம் விடுதி கல்லூரி வளாகத்தில் உள்ளேயே இருக்கும் வெளியாட்கள் நடமாட்டம் இருக்காது அப்படியிருக்க யார் களவு செய்திருப்பார்கள்?
நண்பரோ இரவில் படுக்கப் போகும் முன் அந்தச் செயினை எப்போதும் பூட்டாத அவரது சூட்-கேஸ் பெட்டியுள் துணிகளுக்கு இடையில் மறைத்து வைத்துவிட்டு அறைக்கு வெளியே வாசலில் படுத்துறங்குவது வழக்கம்
அதை நோட்டமிட்ட சக அறைமானவர்கள் அல்லது வேறு அறையில் உள்ள யாரேனும் மாணவர்கள் திருடியிருக்கலாம் என்று கணிப்பு
செயினைக் களவு கொடுத்த நண்பரின் அண்ணன் மதுரையில் ஒரு பிரபல மருத்துவர் அவரது நண்பர் அப்போதைய உயர் காவல் அதிகாரி என்பதால் கொஞ்ச நேரத்தில் அதிரடியாக வந்தார்கள் போலிஸ் ஜீப்...காவலர்கள்... போலிஸ் நாய் என்று.....
இரண்டு போலீஸ்காரர்கள் கயிற்றில் பிடித்திருக்க அந்தப் போலிஸ் மோப்ப நாய் இழுத்துக்கொண்டு அந்த விடுதி அறையின் உள்ளே நுழைந்தது. நுழைந்த வேகத்தில் வெளியே வந்தது....மீண்டும் உள்ளே சென்று அந்தப் பெரிய சூட்-கேஸை முகர்ந்து பார்த்தது
அறையின் உள்ளேயும் வெளியேயும் சக மாணவர்கள் கூட்டம் அந்தப் போலிஸ் நாய் என்ன செய்கிறது என்று பார்க்க...ஆனால் அந்தப் போலிஸ் நாயோ என்ன செய்வது என்று தெரியாமல் அறையில் உள்ளே வெளியே நின்றிருந்த எல்லோர் அருகிலும் சென்று லொள்..லொள் என்று குறைத்துவைக்க...........
சுமார் இருபது பேருக்கு மேல் எங்கள் பெயர்கள் அனைத்தையும் குறித்துக் கொண்டு எல்லோரும் ஸ்டேசனில் வந்து அய்யாவ பாருங்க.....என்று சொல்லிப் போனார்கள் போலீஸ்காரர்கள்
போலிஸ் ஸ்டேசனோ நாகமலை புதுக்கோட்டை ஊருக்குள் இருக்கின்றது நாங்கள் அனைவரும் ஸ்டேஷனுக்குப் போனோம் அய்யா வரும் வரை ஸ்டேசன் வாசலில் வரிசையாகக் காத்திருந்தோம் எங்களுக்குள் யாருக்கும் போலிஸ் பயமும் இல்லை ஒருவருக்கொருவர் சிரித்து விளையாடிக்கொண்டிருக்க அங்கே வந்த காவலர்...........
சிரிங்கடா...அய்யா வந்த பிறகுதான் உங்களுக்கு இருக்கு அப்புறம் அழுவிங்க என்று சப்-இன்ஸ்பெக்டர் ரொம்ப கடுமையானவர் என்று சொல்லாமல் சொல்லிச் சென்றார்
சிறிது நேரத்தில் அந்தப் போலிஸ் அய்யாவும் வந்தார்......அவரது இடதுகையில் மாவுகட்டு சமீபத்தில் யாரேனும் குற்றவாளி அந்த நேர்மையை கடமையாகக் கொண்டவரை தாக்கியிருக்கலாம்
அவரோ...
"என்னய்யா இஃது? இங்கே இவ்வளவு கூட்டம் யாரு இவியிங்க...?"
"அய்யா...காலேஜ் ஆஸ்ட்டலில் செயினு காணோம்னு போனோம் அய்யா...அங்கே நாய் இவியிங்க அம்புட்டுபேரையும் பார்த்து குழைச்சுது.....அய்யா...அதுதான்..."
"யோவ் அதுக்கும் வேலையில்ல..உங்களுக்கும் வேலையில்ல அவியிங்க அம்புட்டு பேரையும் போச்சொல்லுய்யா..."
அப்புறம் நாங்கள் விடுதிக்கு வந்துவிட்டோம் ஆளாளுக்கு ஒரு யோசனை...அதில் ஒருவர் சொன்னது.......
கருமாத்தூர் பக்கத்து ஊருல ஒரு கோடாங்கி இருக்காரு மக்கா..நாம அவரப் பார்த்தா வெத்தலைல மை போட்டு களவானிய காட்டிக் கொடுத்துருவாறாம்........நாங்கள் நாலைந்து நண்பர்கள் களவு கொடுத்த நண்பர் தலைமையில் அந்தக் கோடாங்கியைப் போய்ப் பார்த்தோம்..........
கூரை மேய்ந்த ஒரு பியிந்த குடிசை...உள்ளே எட்டிப்பார்த்தால் கையில் பெரிய திருப்பாச்சி அருவாளுடன் ஒரு சின்ன மதுரை வீரன் மண் சிலை அதன் முன்னே நட்டிவைத்த அருவாள் முனையில் குத்திவைக்கப்பட்ட குங்குமம் பூசிய எலுமிச்சை எங்களுக்கு முன்பே குறி கேட்க வந்த இரண்டு கூட்டம் உள்ளே ஆக்ரோசமாகக் கோடாங்கியின் உடுக்கை சப்தம்
அடுத்த புத்தகக் கண்காட்சியில் நாமும் ஒர் எழுத்தாளராகப் பிறப்பெடுத்து கோடி இல்லாவிட்டாலும் சில ஆயிரங்களாவது சம்பாதிக்க அருள் புரிவாய் எழுத்துக் கடவுளே! என்று எழுதிய முதல் சிறுகதை.......
இரண்டு போலிஸ்காரர்களை இழுத்துக்கொண்டு ஒருபோலிஸ் நாய் வந்தது அங்கும் இங்கும் மோப்பம் பிடித்த அந்த நாய் அறையின் உள்ளே நுழைந்து அந்தப் பெட்டியை மோப்பம் பிடித்தது............... (என்னடா இது பெரிய திகில் நாவலாக இருக்குமோ? என்று நினைத்து யாரும் பயந்து பாதியில் விட்டு ஓடிவிடாதீர்கள் அய்யா....)
நான் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் போது நடந்த சம்பவம் . அன்று காலை நாங்கள் வகுப்புக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் போது பக்கத்து அறையில் கூப்பாடு....டேய் என் செயின காணலடா....என் சக விடுதி மாணவர் விருதுநகர் பருப்பு வியாபாரி மகன் தன் தொப்பை வயிற்று தொப்புளுக்கும் கீழ் தொங்கி க்கொண்டிருக்கும் பத்து பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லை என்று
அறைக்கு மூன்று மாணவர்கள் என்று தங்கியிருக்கும் இருபது அறைகள் உள்ள அந்தப் புதிய விடுதியில் பொதுவாக இரவில் காற்றோட்டத்துக்காக அறைக் கதவுகளை நாங்கள் யாரும் அடைப்பதில்லை நிறைய மாணவர்கள் இரவில் அறைவாசலில்தான் படுத்திருப்போம் விடுதி கல்லூரி வளாகத்தில் உள்ளேயே இருக்கும் வெளியாட்கள் நடமாட்டம் இருக்காது அப்படியிருக்க யார் களவு செய்திருப்பார்கள்?
நண்பரோ இரவில் படுக்கப் போகும் முன் அந்தச் செயினை எப்போதும் பூட்டாத அவரது சூட்-கேஸ் பெட்டியுள் துணிகளுக்கு இடையில் மறைத்து வைத்துவிட்டு அறைக்கு வெளியே வாசலில் படுத்துறங்குவது வழக்கம்
அதை நோட்டமிட்ட சக அறைமானவர்கள் அல்லது வேறு அறையில் உள்ள யாரேனும் மாணவர்கள் திருடியிருக்கலாம் என்று கணிப்பு
செயினைக் களவு கொடுத்த நண்பரின் அண்ணன் மதுரையில் ஒரு பிரபல மருத்துவர் அவரது நண்பர் அப்போதைய உயர் காவல் அதிகாரி என்பதால் கொஞ்ச நேரத்தில் அதிரடியாக வந்தார்கள் போலிஸ் ஜீப்...காவலர்கள்... போலிஸ் நாய் என்று.....
இரண்டு போலீஸ்காரர்கள் கயிற்றில் பிடித்திருக்க அந்தப் போலிஸ் மோப்ப நாய் இழுத்துக்கொண்டு அந்த விடுதி அறையின் உள்ளே நுழைந்தது. நுழைந்த வேகத்தில் வெளியே வந்தது....மீண்டும் உள்ளே சென்று அந்தப் பெரிய சூட்-கேஸை முகர்ந்து பார்த்தது
அறையின் உள்ளேயும் வெளியேயும் சக மாணவர்கள் கூட்டம் அந்தப் போலிஸ் நாய் என்ன செய்கிறது என்று பார்க்க...ஆனால் அந்தப் போலிஸ் நாயோ என்ன செய்வது என்று தெரியாமல் அறையில் உள்ளே வெளியே நின்றிருந்த எல்லோர் அருகிலும் சென்று லொள்..லொள் என்று குறைத்துவைக்க...........
சுமார் இருபது பேருக்கு மேல் எங்கள் பெயர்கள் அனைத்தையும் குறித்துக் கொண்டு எல்லோரும் ஸ்டேசனில் வந்து அய்யாவ பாருங்க.....என்று சொல்லிப் போனார்கள் போலீஸ்காரர்கள்
போலிஸ் ஸ்டேசனோ நாகமலை புதுக்கோட்டை ஊருக்குள் இருக்கின்றது நாங்கள் அனைவரும் ஸ்டேஷனுக்குப் போனோம் அய்யா வரும் வரை ஸ்டேசன் வாசலில் வரிசையாகக் காத்திருந்தோம் எங்களுக்குள் யாருக்கும் போலிஸ் பயமும் இல்லை ஒருவருக்கொருவர் சிரித்து விளையாடிக்கொண்டிருக்க அங்கே வந்த காவலர்...........
சிரிங்கடா...அய்யா வந்த பிறகுதான் உங்களுக்கு இருக்கு அப்புறம் அழுவிங்க என்று சப்-இன்ஸ்பெக்டர் ரொம்ப கடுமையானவர் என்று சொல்லாமல் சொல்லிச் சென்றார்
சிறிது நேரத்தில் அந்தப் போலிஸ் அய்யாவும் வந்தார்......அவரது இடதுகையில் மாவுகட்டு சமீபத்தில் யாரேனும் குற்றவாளி அந்த நேர்மையை கடமையாகக் கொண்டவரை தாக்கியிருக்கலாம்
அவரோ...
"என்னய்யா இஃது? இங்கே இவ்வளவு கூட்டம் யாரு இவியிங்க...?"
"அய்யா...காலேஜ் ஆஸ்ட்டலில் செயினு காணோம்னு போனோம் அய்யா...அங்கே நாய் இவியிங்க அம்புட்டுபேரையும் பார்த்து குழைச்சுது.....அய்யா...அதுதான்..."
"யோவ் அதுக்கும் வேலையில்ல..உங்களுக்கும் வேலையில்ல அவியிங்க அம்புட்டு பேரையும் போச்சொல்லுய்யா..."
அப்புறம் நாங்கள் விடுதிக்கு வந்துவிட்டோம் ஆளாளுக்கு ஒரு யோசனை...அதில் ஒருவர் சொன்னது.......
கருமாத்தூர் பக்கத்து ஊருல ஒரு கோடாங்கி இருக்காரு மக்கா..நாம அவரப் பார்த்தா வெத்தலைல மை போட்டு களவானிய காட்டிக் கொடுத்துருவாறாம்........நாங்கள் நாலைந்து நண்பர்கள் களவு கொடுத்த நண்பர் தலைமையில் அந்தக் கோடாங்கியைப் போய்ப் பார்த்தோம்..........
கூரை மேய்ந்த ஒரு பியிந்த குடிசை...உள்ளே எட்டிப்பார்த்தால் கையில் பெரிய திருப்பாச்சி அருவாளுடன் ஒரு சின்ன மதுரை வீரன் மண் சிலை அதன் முன்னே நட்டிவைத்த அருவாள் முனையில் குத்திவைக்கப்பட்ட குங்குமம் பூசிய எலுமிச்சை எங்களுக்கு முன்பே குறி கேட்க வந்த இரண்டு கூட்டம் உள்ளே ஆக்ரோசமாகக் கோடாங்கியின் உடுக்கை சப்தம்
குடிசைக் கோயில் வாசலில் ஒரு பூஜை சாமான்கள் கடை அதுவும் அந்தக் கோடாங்கிக்கு சொந்தமானதாகக்தான் இருக்கவேண்டும் அங்கே ஒரு கிழவி...
."சாமியப் பார்க்க வந்தீங்களா...? என்ன குத்தமா வந்தீக...? ஏன்னா..அதுக்குதக்க சாமிக்கு சாமான் வாங்கனும்ல..."
"அது பாட்டி...இவரு செயினக் காணோம் அதுதான் மைபோட்டு பார்த்து களவாணிப் பயல பிடிக்கலாம்னு வந்திருக்கோம்"
"அப்படியா...இந்தாங்க வெத்தல..பாக்கு...தேங்கா..எலுமிச்ச...இதுக்கு ஒரு பத்து ரூபா கொடுங்க...அப்படியே சாமி தட்டுல பத்து ருபாய்க்கு மேல உங்க விருப்ப பட்ட துட்டப் போடுங்க... சரியா...புள்ளைகளா...அப்படியே ஓரமா இருங்க சாமி மலையேறிட்டதும் கூப்பிடுறேன்...."
உள்ளே எழுந்து போன கிழவி ரொம்ப நேரம் கழிச்சுதான் வந்துச்சு அதுக்கு முன்னாடி இன்னொரு நடுவயது பெண்மணி எங்ககிட்ட பேச்சுக் கொடுத்து எங்களைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரிந்துக்கொண்டது. மீண்டும் உள்ளே போன கிழவி வந்ததும் அந்த நடுவயது பெண்மணி எழுந்து குடிசைக்குள்ளே போனது அந்தக் கிழவியோ..புள்ளைகளா இப்ப உள்ளே போங்க சாமிகிட்ட எதுவும் பேசக்கூடாது என்று சொல்லி எங்களை உள்ளே அனுப்பினாள்
உள்ளே போனால்.......கையில் உடுக்கையுடன் முனியாண்டி மீசையுடன் நடுத்தர வயதான தொப்பை கோடாங்கி பார்வையாலே எங்களை அழைத்து அவரது எதிரில் அமரச் செய்து பாட்டாலே குறி சொன்னார்....
ஆங்....ஒவுவ்....உஊம்...
களவு போன தங்கத்த
தேடி வந்த மக்கா...
எடுத்தவன் எங்குமில்ல
இங்கேதான் இருக்காம்பா...
இன்னும் அஃது அழியவில்ல...
அப்படியேத்தான் இருதப்பா...
ம்ம்ம்...வீரா....சொல்லுடா
இவியிங்களுக்கு
யாருன்னு காட்டுடா...
என்று ஏதேதோ உடுக்கையை அடித்துக்கொண்டு நாக்கை கடித்துக்கொண்டு உளறிக் கொட்டினார் அப்புறம் அதையும் நிறுத்திவிட்டு..........ஒரு வெற்றிலையின் பின்புறம் ஏதோ ஒரு சிறு தகரக் குப்பியிலிருந்து எடுத்த கருப்பு மையைத் தடவி எங்களை அழைத்து...
ம்ம்ம்ம்ம்ம்...
பாருங்கப்பா...
வாசல் தெரிகிறதா
அதுல சோத்துக்கை பக்கம் பாரு...
அங்க ஒருத்தன் படுத்திருக்கிறானா.....
அவனப் பிடிங்கப்பா...
எல்லாம் வீரன் தீர்த்துவைப்பான்
சொல்லிட்டான் மதுர வீரனப்பா...
என்று எல்லோருடைய நெற்றியிலும் விபூதியை அள்ளி வீசி.. தட்சனைய போடுங்கப்பா என்று தட்டை நீட்ட.... நண்பரும் சில்லரையாக இருபது ரூபாயை தட்டில் போட்டார்...
நாங்களும் இடத்தைக் காலிபன்னினோம் எங்கள் யாருடைய முகத்திலும் ஈயாடவில்லை.......கோடாங்கி வெற்றிலையில் மை போட்டுச் செயினைக் களவாண்டவன் வாசலில் வலது கை பக்கம் படுத்திருப்பவன் என்று சொன்ன களவானி வேறுயாருமில்லை .......
அது அந்தச் செயினைப் பறிகொடுத்த நண்பர்தான்
நாங்கள் சும்மா கோடாங்கி எதையோ சொல்லி ஏமாற்றுகின்றார் என்று பிற்பாடு மறந்துவிட்டோம் ஆனால் ரொம்ப நாளைக்குப் பிறகு நண்பர் பேச்சுவாக்கில் அவரது தங்கச்செயின் காணாமல் போன தங்கமலை ரகசியத்தைச் சொன்னார் என்னிடம் மட்டும் என்று கிட்டத்தட்ட எல்லோரிடமும்....
அந்த ரகசியம்........
ஒருநாள் மாலையில் வாலிப அரிப்பெடுத்த நண்பர் வடிகால் தேடியும் சொரிந்துகொள்ளவும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் ஒரு கில்மா பார்ட்டியிடம் போய் அங்கு இருந்த இரண்டு தடியர்களிடம் தொப்பையில் செமத்தியாக அடிவாங்கி விட்டு தங்கச் செயினையும் பறிகொடுத்த பரிதாபக் கதையை.........
எனக்கு ஏதோ மண்டையில் பொறி தட்டியது...அடடா..அந்தக் கோடாங்கி சொன்னதும் சரிதான்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |