ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி முதல்வராக பதவியேற்றதிலிருந்து நடைபெறும் நிகழ்வுகள் சில சிரிப்புக்குரியதாகவும் சில சிந்திக்க வேண்டியதாகவும் உள்ளது...........
டில்லியில் முதல்வராக இருப்பவருக்கு அங்கே குற்றங்கள் நடை பெறாமல் தடுக்க அவருக்கு போலிஸ் அதிகாரம் இல்லை என்பதும் அந்த அதிகாரம் மத்தியில் ஆளும் அரசுக்கே உள்ளது என்பதும் இதுவரை எத்தனை பேருக்கு தெரியும்
ஆனால் டில்லியில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அதற்கு நாளை மக்கள் டில்லியை ஆளும் முதல்வர் கெஜ்ரிவால் மீதுதானே குற்றம் சுமத்துவார்கள் எனவே இந்த ஆம் ஆத்மி தர்ணா சானக்கியத்தனமாக கேஜ்ரிவால் எடுத்த அறிவார்ந்த நடவடிக்கை என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றார்கள்
சோளக் காட்டில் வைக்கப்பட்ட பொம்மை போன்று டில்லியில் கேஜ்ரிவாலின் நிலை உள்ளது முதலில்பயப்படும் பறவைகள் பல நாட்களாக அந்த பொம்மை ஒரே நிலையில் நிற்பதை பார்த்து சோளத்தை தின்றுவிட்டு அந்தக் கொல்லைப் பொம்மை மீதே அமர்ந்து எச்சமிட்டு செல்வதை காணலாம்
கடந்த இரண்டு நாட்களாக டெல்லியை உலுக்கிய கேஜ்ரிவாலின் இந்த தர்ணாவுக்கு காங்.பாஜக...போன்ற அரசியல் கட்சிகள் வழக்கம்போல் அவரை கோமாளியாக சித்தரிக்க முயல்வதும் ஆம் ஆத்மியின் நாடகம் என்றும் வசைபாடுவதும் மக்களுக்கு அந்தக் கட்சிகள் மீது உள்ள நம்பிக்கையை குறைக்கும் என்பதை அறிவார்களா...?
அதேநேரம் கேஜ்ரிவால் போன்று அதிரடியாக ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகள் மக்கள் நம்பிக்கையை இன்னும் வளர்த்துக்கொள்ள மக்களுக்கு தொல்லை தராத சாத்வீக நடவடிக்கைகள் மேற்கொண்டு தங்கள் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ள முயல்வதுதான் அவருக்கும் அவரது ஆத்மிகளுக்கும் நல்லது...மக்களும் அதைத்தான் விரும்புவார்கள் இதுபோன்ற முறைகேடு வழிமுறைகள் தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போகாதா?
ட்விட்டர்கள் பார்வையில்...........
Iyyanars* @iyyanars
அம்பி !! @VimalAmbi
K.Thirumani Pandian @kthirumani
Cable Sankar @cablesankar
RAMAKRISHNAN @RAMAKRISHAN5
Vijayaramachandran @UNMAI_SUDUM
✍ மழலை™ @WritterMazhalai
இளநி வியாபாரி® @GoundarReturns
புலவர் தருமி @pulavar_tharumi
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு-29/1/2014
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....டில்லியில் முதல்வராக இருப்பவருக்கு அங்கே குற்றங்கள் நடை பெறாமல் தடுக்க அவருக்கு போலிஸ் அதிகாரம் இல்லை என்பதும் அந்த அதிகாரம் மத்தியில் ஆளும் அரசுக்கே உள்ளது என்பதும் இதுவரை எத்தனை பேருக்கு தெரியும்
ஆனால் டில்லியில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அதற்கு நாளை மக்கள் டில்லியை ஆளும் முதல்வர் கெஜ்ரிவால் மீதுதானே குற்றம் சுமத்துவார்கள் எனவே இந்த ஆம் ஆத்மி தர்ணா சானக்கியத்தனமாக கேஜ்ரிவால் எடுத்த அறிவார்ந்த நடவடிக்கை என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றார்கள்
சோளக் காட்டில் வைக்கப்பட்ட பொம்மை போன்று டில்லியில் கேஜ்ரிவாலின் நிலை உள்ளது முதலில்பயப்படும் பறவைகள் பல நாட்களாக அந்த பொம்மை ஒரே நிலையில் நிற்பதை பார்த்து சோளத்தை தின்றுவிட்டு அந்தக் கொல்லைப் பொம்மை மீதே அமர்ந்து எச்சமிட்டு செல்வதை காணலாம்
கடந்த இரண்டு நாட்களாக டெல்லியை உலுக்கிய கேஜ்ரிவாலின் இந்த தர்ணாவுக்கு காங்.பாஜக...போன்ற அரசியல் கட்சிகள் வழக்கம்போல் அவரை கோமாளியாக சித்தரிக்க முயல்வதும் ஆம் ஆத்மியின் நாடகம் என்றும் வசைபாடுவதும் மக்களுக்கு அந்தக் கட்சிகள் மீது உள்ள நம்பிக்கையை குறைக்கும் என்பதை அறிவார்களா...?
அதேநேரம் கேஜ்ரிவால் போன்று அதிரடியாக ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகள் மக்கள் நம்பிக்கையை இன்னும் வளர்த்துக்கொள்ள மக்களுக்கு தொல்லை தராத சாத்வீக நடவடிக்கைகள் மேற்கொண்டு தங்கள் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ள முயல்வதுதான் அவருக்கும் அவரது ஆத்மிகளுக்கும் நல்லது...மக்களும் அதைத்தான் விரும்புவார்கள் இதுபோன்ற முறைகேடு வழிமுறைகள் தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போகாதா?
ட்விட்டர்கள் பார்வையில்...........
Iyyanars*
ஆம் ஆத்மி செய்யும் தர்ணா போராட்டங்களால்,உள்நாட்டுக் கலவரங்கள் அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது!
அம்பி !!
பெண்களை இழிவுபடுத்தும் ஆண்கள் - தங்கள் வீட்டு பெண்களும் அதில் அடக்கம் என உணருவது ஏனோ - #ஆம் ஆத்மி கட்சி
K.Thirumani Pandian
கேரள நர்ஸ்களை கிண்டலடித்துப் பேசிய ஆம் ஆத்மி குமார் விஸ்வாஸ் மீது நர்ஸ்கள் கொதிப்பு # இருக்கிற பழைய வழக்குகள் எல்லாம் இனி ஆம் ஆத்மி மேலதான்
Cable Sankar
போகுற போக்கப் பார்த்தா ஆம் ஆத்மி அழுகுன ஆத்மியாயிரும் போல இருக்கே
RAMAKRISHNAN
டெல்லியில் ஆம்ஆத்மி க்கு ஆதரவை கொடுத்துவிட்டு காங்கிரஸ் திருதிருவென முழித்துக் கொண்டு இருக்கிறது
Vijayaramachandran
வல்லவனாய் இல்லாத நல்லவன் ஒருவன் அரசியலுக்கு வந்தால் என்ன பாடு படுவான் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஆம்ஆத்மி கட்சி - கல்யாணசுந்தரம் நாம்தமிழர்
✍ மழலை™
ஆம் ஆத்மி சோனியா ரியாக்ஷன்
இளநி வியாபாரி®
உடனடி மாயாஜாலம் நிகழனுமுன்னா அதுக்கு நீங்க அற்புதசுகமளிக்கும் கூட்டத்துக்குதான் போகணும் ஆம் ஆத்மி கட்சிக்கு இல்ல.
புலவர் தருமி
‘டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஏற்படுத்திய மாற்றம் நாடு முழுவதும் இளைஞர்களை வேறு விதமாக சிந்திக்க வைக்கிறது’ - ஞாநி
thanks to all twitter friends and their tweets
thanks to all twitter friends and their tweets
உங்கள் பார்வையில்..........
ஆம் ஆத்மியின் டில்லி தர்ணா தேவையானதா? நாடகமா?வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு-29/1/2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |