அட...
மனிதா!...மனிதா!
நீ
புண்ணாக்கும்
பருத்திக்கொட்டையும்
போட்டு வளர்த்தது....
ஊட்டி வளர்த்தது.........
பாசத்தில் என்று
மோசம போய்விட்டேன்
இன்று நீ
என்னை ஓட விட்டு
வாலைப் பிடிப்பது...
உன் வீரத்தை
வெளிச்சம் போடவா..?
ஜல்லிக்கட்டு என்று
மல்லுக்கட்டுவது
என் வீரத்தை
எடை போடவா?
உன்னோடு
வயலுக்கு வந்தேன்
பாழ் நிலத்தை
உழுது போட்டேன்
பயிர் வளர்க்க
பாடு பட்டேன்
உன் வயிற்றுக்கு
சோறு போட்டேன்
ஆனால்...
நீயோ
வைக்கோலை மட்டும்
எனக்கு போட்டாய்
அப்போதே தெரியும்
அயோக்கியன் நீ என்று...
இப்போது
தெரிந்துவிட்டது
மனிதா! மனிதா!
நீ
எவ்வளவு கொடிய
இரக்கமில்லாதவன்
குறிப்பு-இது ஒரு நையாண்டி கவிதை மட்டுமே தவிர இதனால் நான் தமிழரின் பாராம்பரிய ஜல்லிக்கட்டுக்கு எதிரி அல்ல
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |