google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: புத்தகக் கண்காட்சியும் மூடர்கூடமும்

Wednesday, January 15, 2014

புத்தகக் கண்காட்சியும் மூடர்கூடமும்

ஏதோ புத்தகக் கண்காட்சிக்கு போய் பத்து புத்தகங்களை வாங்கிவிட்டால் பெரிய அறிவுஜீவிகள் என்றும் எதையாவது எழுதி காகிதத்தை நிரப்பி சில புத்தகங்கள்போட்டுவிட்டால் பெரிய எழுத்தாளர்களாகவும் கண்கட்டு வித்தைகள் செய்யும் பதிப்பகத்தார்களின் போலி அலைப்பறையை எதிர்த்துத்தான் இப்பதிவே தவிர......


இன்று எழுதுவது 
தொழிலாகி விட்டது
இங்கே வார்த்தைகள் 
விற்பனை ஆகின்றது 

அன்று  
ஆத்திச் சூடி எழுதிய 
அவ்வைக் கிழவியும்
ஓலைச் சுவடியை 
கூவி விற்றாளா...?

வள்ளுவர்தான்
வார்த்தை வியாபாரியாக 
வீதியில் அலைந்தாரா..?

கம்பன்தான் 
கடைவீதியில்  
கடை விரித்தாரா..?

இளங்கோதான் 
எழுதியதை 
ஏலம் போட்டாரா...?


துட்டுக்காக
பாட்டு எழுதினால் 
பாரதியாரும்... 
அன்றே 
வெள்ளையனிடம் 
விலை போயிருப்பார்.

இன்று 
புத்தகம் போட்டவர் 
பெரும் கவிஞர்...

சினிமாவுக்கு  
பாட்டு எழுதியவர்
கோடீஸ்வரர்....

சின்னப்  புத்தகமா..?
சின்ன வியாபாரி 
பெரிய  நாவலா...?
பெரிய  வியாபாரி 

எவருக்கும்  
எதுவும் புரியாமல் 
பக்கம்  பக்கமாக
எழுதிக் குவித்தால்
விருது வியாபாரி 

இவர்கள்  
எழுதியவைகளை 
கூக்கிலில்
தட்டிப் பார்த்தால்..
அத்தனையும் 
தப்புத்தாளங்கள்  

எல்லாமும் 
ஏதாவது ஓர் மொழியில்
எவறாவது எழுதியவைகள்

இவர்கள்  
எழுத்தாளர்கள் இல்லை 
எழுத்துத் திருடர்கள்

இவர்கள் 
காகிதத்தில் 
கொட்டிவைத்த 
குப்பைக் கூளங்களை 
கழுதைக்குக்  கொடுத்தால் 
எட்டி உதைக்கும் 

இவர்கள்
கிறுக்கி வைத்த 
எண்ணக்கோலங்களை 
யார் படிப்பது...?

எழுதியவரே
இன்னொரு  முறை
எடுத்து படிப்பாரா..?
அப்படிப்  படித்தால் 
அவரும்தான் இருப்பார் 
அடுத்த நிமிடமே 
மனநல மருத்துவ மனையில்...

தூக்கு கைதிக்கு 
கையில் கொடுத்தால் 
தண்டனை காலம் வரை 
காத்திருக்க மாட்டான்.
அடுத்த  நிமிடமே 
அவனும் தொங்குவான்...?

இவர்களுக்கு 
மாத இதழ்களும் 
வாரயிதழ்களும் 
விளம்பரத் தட்டிகள் 

தொலைக்காட்சிகள் 
இலவசமாக 
விளம்பரம் செய்யும் 
பிளக்ஸ் பேனர்கள்

பத்துப் புத்தகங்களை 
எக்கில் எடுக்கியபடி
தொலைக்காட்சியில்  
தொல்லைப் பேட்டி....

"இந்த  
அறிவுஜீவியின்
புத்தகங்களை
புரட்டாவிட்டால்...
தூக்கம்  வராது...!"

அவரது
வீட்டில்  போய் 
பார்த்தால் தெரியும் 
அத்தனையும் 
அவரது படுக்கையில் 
தலையணைகளாக....

இந்தப்  
புத்தகக் கண்காட்சி-
எத்தர்களும் பித்தர்களும் 
ஏமாற்றிக் கொள்ளும்.....
மூடர்  கூடம்

(என்ன.....யாருக்கும் 
எதுவும் புரியவில்லையா..?
அப்பாடா...
பிழைத்துப் போகட்டும் 
அறிவுஜீவிகள்.....

எது எப்படியோ...?
எத்தனை நாட்கள்தான் 
இந்த புத்தக எழுத்தாளர்களும் 
இணையத்தில் எழுதுவோரை 
ஏளனமாகப் பேசுவார்...
எவரும் இனி பேசுவாரோ...?)

(குறிப்பு-நீங்கள் ஒரு புத்தக எழுத்தாளராகவோ பதிப்பாளராகவோ இருந்தால்...என்னை  முட்டாள் என்றும் படிபறிவில்லாதவன் என்றும் திட்ட தோன்றலாம்....பரவாயில்லை

இல்லையென்றால் நன்றாக யோசனை செய்யுங்கள் நான் சொல்வது..... அறிவை நாம் தேடிப் போகவேண்டும் அதைக் காட்சிப் பொருளாக வைத்து விற்பவரிடம் என்ன அறிவு நமக்கு கிடைக்கும்........


என். சொக்கன்@nchokkan 
புத்தகக் கண்காட்சி வாசலில் ‘நல்லி சின்னசாமி செட்டி உங்களை வரவேற்கிறது’ என்று கொட்டை எழுத்தில் பேனர். அவர் என்ன அஃறிணையா?! 

புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவை ஒரு தொலைக்காட்சி சானல் ஸ்பான்ஸர் செய்வது நகைமுரண்? :)

suprajaa@suprajaa23 
// k.janaki Vallabhan புத்தகக் கண்காட்சி என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் இந்தக்கும்பலுக்கு அரசு கடுமையாக நடவடிக்கை.

ரிப்போர்ட்டர் @tamilreporter 
இங்கயும் புத்தகக் கண்காட்சி நடக்குது. மொத்தம் 3 நாள்... எங்ககிட்டயும் சீப்பு இருக்கு. தலைமுடியும் இருக்கு. ஸோ...

RajanLeaks @RajanLeaks 
புத்தகக் கண்காட்சில குரான் இலவசமா தராங்களாம். #செல்ப்நோட்

ARFU@kadaikutti 
புத்தகக் கண்காட்சிக்கு பலர் செல்வது அறிவைக் காட்ட.. சிலர் செல்வது அறிவைப் பெருக்க..

jayarajpandiyan@jayarajpandiyan 
பொழுது போக்கு பெளதீகம் புத்தகத்த ரொம்பநாள் கழிச்சு புத்தகக்கண்காட்சீல பாத்தேன். வீட்ல பரண்ல போட்டு...

Kamala @Lotus_moonbell 
சென்னையில் புத்தகக் கண்காட்சிசென்னை வாசிகள் மட்டும்தான் படிப்பாளிகளாம்! இன்னாம்மா........?

vijay sivanandan@svijaybpt 
புத்தகக் கண்காட்சியில் தரமற்ற குப்பைகளும் நிறைய குவிந்து கிடக்கும்....!குப்பை எழுத்தாளர்கள் கிழிக்காமல் வௌியிடும் குப்பைகள் அவை....!!!

The Princess @rajakumaari 
புத்தகக்கண்காட்சிக்கு போனதுல பெரிய ஆத்தம திருப்தி.ரொம்ப நாளா தேடிட்டு இருந்த wraps&rolls ஸ்டால் போட்ருந்தது தான்.இதுக்காகவே தினமும் போகலாம்

Gemini @K_kamalB 
நிறைய பேர் சும்மா சுற்றிப் பார்த்து விட்டுப் போய் விடுவதால் புத்தகக் கண்காட்சி என்றுதான் இருந்திருக்க வேண்டும்!

4sn@4SN 
புத்தரைக் கண்டீர்களா? ;)  ஒரு 5000 குருக்களும் 10000 சீடர்களும் உலவும் பூமியா இந்த புத்தகக் கண்காட்சி."

உழவே தலை@ThanjaiSabari 
என்னோட எல்லைகள் இதுவே:-))நான் புத்தகக் கண்காட்சிகளுக்கு போவதில்லை.ஆனந்தவிகடனும்,குமுதமும் பெட்டிக் கடையிலேயே கிடைக்கிறது."
டி'நேஷன் @DineshanS 
புத்தகக்கண்காட்சில இலக்கியத்தை கிலோ(Kg) கணக்கில வாங்கிருப்பாங்கன்னு அவதானிக்கிறேன்! :-))

♫ரே♫டு ந♫கர♫ஜன்@erode14 
1. #புத்தகக்கண்காட்சி தொடங்கினாலும் தொடங்கிச்சு எங்க பார் ’கழிவு போக இவ்வளவு விலை’-ன்னு அப்டேட்டுகள். எந்த அர்த்தத்துலன்னே புரியல
2. ஆசிரியர் எழுதினதுல வேலைக்காவாதுன்னு பப்ளிஷர் கிழிச்சுப் போட்ட பக்கங்கள் போக மீதியா? #சென்னைபுத்தகக்கண்காட்சி 

Riyas Qurana@riyasquranaa 
கதைகளைப் படிச்சி வாசகர்கள் தற்கொலை செய்த சம்பவம் இந்தமுறை நடந்துவிடுமோ? @ புத்தகக் கண்காட்சி 2014

மேகத்தை துரத்தினவன் @sihva107 
தங்கச்சி போற வேகத்த பார்த்தா அடுத்த புத்தகக் கண்காட்சில புக்கு போட்ரும்போலயே !! இலக்கியவாதிகளே உஷாராயிடுங்க

kvetrivel@kvetrivel 
வீரம், ஜில்லா - பத்தி பேசறதுல இன்னைக்கு புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கிறதப் பத்தி யாருமே பேச மாட்றேங்களே...

பிரேம் குமார்@mannankkatti 
புக்கு நல்லா இல்லைன்னா பணம் வாபஸ் கிடைக்குமா? # புத்தகக் கண்காட்சி ட்விட்!

Selventhiran @selventhiran 
புத்தகக் கண்காட்சி அலப்பறைகளால் மனச்சோர்வில் இருக்கும் தமிழ்ச்சமூகமே
இந்த புத்தகக் கண்காட்சிக்காக நிறைய்ய செக்ஸ் புத்தகங்கள் வெளியாகியுள்ளன; உண்மையில் தமிழிலக்கியத்தில் நிகழ்ந்துள்ள மாபெரும் ‘எழுச்சி’

...............இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் நன்றி...ட்விட்டர் நண்பர்கள் 

சென்னை புத்தகக் கண்காட்சியை நான் ஒரு தமாஷாகவே நினைக்கிறேன்.  காரணம் என்ன என்பது பற்றி பலமுறை விளக்கி எழுதி விட்டேன்.  அங்கே கூடும் ஆயிரத்தில் ஒருத்தர் கூட இலக்கியப் புத்தகங்களை வாங்குவதாகத் தெரியவில்லை.  மிருகக் காட்சி சாலையில் கூண்டுக்குள் கிடக்கும் மிருகங்களைப் போல் ஸ்டால் வாசலில் அமர்ந்திருந்த சில எழுத்தாளர்களோடு நானும் அமர்ந்தேன் சிறிது நேரம்............ஒரு பிரபல எழுத்தாளர் 

இன்னும் எழுத்தாளர்கள்-பதிபகத்தார்கள் ராயல்டி தொகை பெரிய அதிரடி சினிமாக் கதையாக வலைத்தளங்களிலும் முகநூலிலும் நடந்துக்கொண்டிருக்க  கதை இபபடியிருக்க என்னை கருத்துக்களால் கடித்துக் குதறும் வெறி பிடித்த இவர்கள் எந்த வகை...........?


இந்தப்பதிவு  இன்னும் உங்களுக்கு கொஞ்சம் விளக்கம் தரும்
எழுத்தும் தொழிலானதே


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1