ஊழலோ ஊழல் என்று ஊளையிட்டு அப்பாடா...எப்படியோ உழல்வாதிகளின் ஆசியோடு தில்லியில் அதிகாரத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி.....நமக்கெல்லாம் ஷங்கரின் முதல்வன் படத்தில் வருவது போல அர்விந்த் கெஜ்ரிவாலின் செயல்கள்...........
ஒரு மாநில முதல்வராக பாதுகாப்பு வளையத்திற்குள் வர மறுப்பது
அரசு வழங்கும் இல்லம் போக்குவரத்து போன்றவைகளை மறுப்பது
மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வராக பதவியேற்றது........
கட்சி செலவுகளுக்காக வசூல் செய்யும் டொனேஷன் பட்டியலை முழுவதுமாக வலைதளத்தில் வெளியிடுவது..........
இப்படி தொடரும் இவரது எளிய நடைமுறைகளைப் பார்க்கும் போது.....
இங்கே நம்மை ஆண்டவர்கள் ஆளும் முதல்வர்கள் அவர்களின் ஆடம்பரங்கள் ஊதாரித்தனங்கள் ஏதோ முதல்வர் என்றால் உண்மையில் ஆண்டவரின் அவதாரம் போன்று.......
அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் பாதுகாப்பு என்ற பெயரில் நடை பெரும் பந்தாக்கள்....வழியெங்கும் வாழ்த்துப் பேனர்கள்
ஓட்டுக்காக இவர்கள் வழங்கும் இலவசங்கள்......நாட்டை நடத்த மக்களைச் சுரண்டி இவர்கள் நடத்தும் மதுக்கடைகள்.........
எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களின் அல்லக்கைகைகள் நடத்தும் அருவெறுப்பு நாடகங்கள் அடச்.......சீ
எப்படிப்பட்ட ஒரு இழிவான நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
அஹிம்சையை போதித்த அண்ணல் காந்தியடிகளுக்கே துப்பாக்கி தோட்டாக்களை பரிசளித்த நாட்டில்........இப்படிப்பட்ட ஆம் ஆத்மிக்கள் சாதிக்கப் போவது என்ன...........?
எது எப்படியோ எனது வலைப்பதிவில் நான் வைக்கும் கருத்துக்கனிப்புகளுக்கு எனது அன்பு வலைப்பதிவு நண்பர்கள் எப்போதும் நல்ல முடிவுதருவார்கள்...ஆனால்....
உங்கள் பார்வையில்.........
ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் டில்லியில் ஆட்சி அமைப்பதை ஆதரிக்கின்றேர்களா...?
இப்படி குழப்பமான தீர்ப்பு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி......குழம்பிப்போனது நீங்கள் மட்டுமல்ல மக்களும்தான்....
இது இபபடியிருக்க இன்னும் டில்லியில் முழுவதுமாக ஆட்சி செய்து மக்கள் நம்பிக்கையை பெறாத ஆம் ஆத்மி வரும் மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய மூன்றாவது அணியாக................
பாரதப்போரில் கிருஷ்ணர் அவதாரம் போல பாரதத்தை காக்க வந்த அரசியல் அவதாரப் புருஷர்களாக காட்டிக்கொள்ளும் நரேந்திர மோடியும் அவரது பாஜக கட்சி ஒருபுறம்................
யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத|
அப்யுத்தான மதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்||
பொருள்: பாரத குலத்தில் உதித்தவனே! எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு அழிவும், அதர்மத்திற்கு உயர்வும் உண்டாகின்றதோ, அப்போதெல்லாம் நான் என்னைப் படைத்துக் கொள்கிறேன்.
அப்படியே அண்ணா ஹசாரே பரமாத்மா போன்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அர்ஜுனன் போன்று இன்னொரு புறமும்...........
பரித்ராணாய ஸôதூனாம்
விநாசாய ச துஷ்கிருதாம்|
தர்ம ஸம்ஸத்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே||
பொருள்: நல்லோரைக் காப்பதற்கும் தீயோரை அழிப்பதற்கும் தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் உதிக்கிறேன்.
இப்படியாக இந்த மூன்று அரசியல்வாதிகள் கூட்டமும் இங்கே
வரும் 2014 மக்களவைத் தேர்தலை......
என்னமோ மாகா பாரதப் போர் போன்று பிரமை எற்படுத்துகின்றார்கள்
உண்மையில்.........
ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸை எதிர்த்து.... மோடி அலையை தடுத்து....மூன்றாவது அணியை அமைத்து....
இருவரையும் ஆட்சியில் அமரவிடாமல் தள்ளாட விடுமா....?
இப்போது டில்லியில் ஆட்சி அமைத்ததுபோல்
நாளை கெஜ்ரிவால் பிரதமராக வரமுடியுமா..............?
உங்கள் பார்வையில்............
இந்த நாட்டுக்கு ஆம் ஆத்மி கட்சியும் அதன் ஆம் ஆத்மிக்களும் தேவையா?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |