google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நடுவில நிறையப் பக்கத்தைக் காணோம்?

Friday, January 3, 2014

நடுவில நிறையப் பக்கத்தைக் காணோம்?


இன்று மக்களுக்காக 
வாழ்கின்றவர்களுக்கு 
நேற்று மக்களை 
வதைத்ததெல்லாம்
மறந்து போச்சு......



இன்று ஏழைப்  பெண்களுக்கு
தாலிக்குத் தங்கம் கொடுக்கும் 
அம்மா அகிலாண்டேஸ்வரிக்கு
அன்று வளர்ப்பு மகன் 
கல்யாண ஊர்வலத்தில் 
தங்கத் தேராய் பவனி போனது 
எல்லாம் மறந்து போச்சு........

இன்று இரவு பகலாய் 
டிவிட்டரிலும் முகநூலிலும்
போதாக்குறைக்கு 
அன்றாடம் ஒரு கடிதம் 
அன்பு உடன்பிறப்புகளுக்கு 
முரசு கொட்டி முழங்கும் 
முத்தமிழ் அறிஞருக்கு 
முல்லை வாய்க்காலில் 
நயவஞ்சகர்களால் 
இலங்கை வாழ் தமிழர்கள்
இன்னலில் மாண்டபோது.....
இவருக்கோ மூட்டு வலி

இங்கே  மட்டும்தான் 
இப்படி நிறைய 
மறை கழ்ண்ட மன்னர்கள் 
இருக்கின்றார்கள் என்றால்...
இல்லவே இல்லை 
பாரத நாடெங்கும் 
இவர்கள் போன்ற 
அரசியல் வாதிகளுக்கு 
அளவே  இல்லை

மதவெறித் தலைவர்கள் 
மண்ணை ஆளத் துடிக்கிறார்கள் 
மோடி  மஸ்தான் போன்று 
மாய வேலைகள் செய்தே...
நாளும்  நல்லவராய் 
நாட்டில் அலைகின்றார்கள்
நேற்று  இவர்களின் 
நேர்மையற்ற பேச்சால் 
உயிரழந்த அப்பாவிகள்
உண்டு  நிறையப் பேர் 
மனிதர்களை மறந்தவர்கள்
இதையெல்லாமா நினைப்பார்கள்....?

இதிலவேறு 
இரண்டுமுறை 
இந்தியாவின் அரியாசனத்தை 
இரும்பு பிடியாய்ப் பிடித்துக்கொண்டு 
மௌன  குருவாய்
இருந்தவரும் சொல்கின்றார்....
இருந்தது போதுமென்று.......
இருந்தது  நல்லா 
இருந்ததென்று.............

தூரத்துத் தேசத்தில் 
தூது போன அம்மணியின் 
கைதுக்குக் கலங்கியாவரு
இங்கே  
இலங்கைப் படையினரிடம் 
அன்றாடம் கைதாகி 
அல்லல்பட்டு அவஸ்தைப் பட்டு
இன்னுயிரை இழந்துவிடும் 
எம் தமிழக மீனவரை 
என்றும் மறந்தாரே........

ஊழல்  என்று 
ஊளையிட்டு
ஊழலுடனே கை...கோர்த்து 
விளக்குமாறு  ஆட்சி செய்ய..........

இப்படியொரு நாடகம் 
இலக்கியவாதி சேக்ஸ்பியர்கூட 
எழுதிவைக்க வில்லை....
ஏன்  எழுதவில்லை
அன்னா....யூ டு புருடஸ்  
அன்றே எழுதிவைத்தாரே..

இன்று கட்சி நடத்த 
அம்பது நூறுக்கு 
கையேந்துபவர்கள்.......
நாளை எவரேனும் 
நூறு கோடி கொடுத்தால்...
நாட்டையே 
கொடுத்து விடமாட்டார்களா?
கெடுத்து விடமாட்டார்களா?


இப்படி 
நிறையப் பேருக்கு 
நடுவுல கொஞ்சம் மட்டுமல்ல 
நிறையப் பக்கத்தைக் காணோம் 

அய்யோ....
விஜய  சேதுபதி
நீ 
விளையாடும்  போது 
விழுந்ததாலே....
உமக்கு 
மண்டையில்  அடிபட்டு 
மறந்துபோனது கொஞ்சமே

அரசியலில் 
சதுரங்கம் விளையாடும் 
சாமர்த்திய சாலிகள்
இவர்கள்
அம்புட்டு  பேருக்கும்
அம்புட்டும் மறந்து போச்சே
எங்கே விழுந்தார்கள்....?
எதில் அடிபட்டது...?

(எச்சரிக்கை-இங்கே எந்த அரசியல்வாதிகளைப் பற்றியும் குறிப்பிட்டு தாக்கி எழுதப்படவில்லை....அப்படி யாரையாவது நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல............)
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1