மீண்டும் துக்ளக் பிறந்து வந்து அரவிந்த்கெஜ்ரிவால் ரூபத்தில் டில்லியில் ஆட்சி செய்கின்றாரோ.......? என்று கேளிக்கைக்குள்ளான ஆம் ஆத்மியின் மக்கள் குறை கேட்கும் அதிரடி ஜனதா தர்பார் ஆனது காமெடி தர்பார்
அதிலும் அவர்களின் ஜனதா தர்பார் என்ற மக்கள் குறைகேட்கும் நிகழ்ச்சி எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி 50 ஆயிரம் குறையுள்ள மக்கள் ஒரே நேரத்தில் கூடி தள்ளு முள்ளுவில் பாதியில் துண்டைக்கானும் துணியக் காணோம் என்று முடிந்தது.........
"இவ்வளவு கூட்டம் வரும் என நான் எதிர்பார்க்க வில்லை. இதனால், முறையான ஏற்பாடுகள் செய்ய இயலாமைக்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மக்கள் தர்பாரை மற்றொரு நாளில் முறையான ஏற்பாடுகளுடன் நடத்துவேன்"
.........என்று தர்பார் ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே ஓட்டம் பிடித்தார் ஊழலை அழிக்கப் பிறந்த கலியுக அவதாரி அரவிந்த் கெஜ்ரிவால்.....
இந்நிகழ்ச்சி ஒரு தொலைக்காட்சியில் முன்பு நடந்த காமெடி தர்பார் நிகழ்ச்சியை நினைவூட்டினாலும்.........
இந்திய நாட்டில் இது காந்தி கண்ட கனவு ஆட்சி ஆரம்பமாகி விட்டதை நமக்கு உணர்த்துகின்றது
அதேநேரம் தள்ளு முள்ளு நடந்த இந்த தர்பாரில் வந்து குவிந்தவர்கள் அத்தனைபேரும் தில்லு முல்லு குத்தகையாளரிடம் அடிமையாக மாட்டிக்கொண்ட ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதை நினைக்கும் போது.......
இந்த நிரந்தர வருவாய் இல்லாத தொழிலாளர்களை ஒப்பந்தக்காரர்களின் பிடியிலிருந்து விடுவித்து நிரந்தர வருவாய் உள்ளவர்களாக மாறிட உதவுமா...? இதற்கு ஆம் ஆத்மி கட்சிக்கும் அதன் ஆம் ஆத்மிகளுக்கும் நிறைய பொருளாதார இழப்பீடும் அதன் தாக்கத்தை தாங்கிக்கொள்ளும் தில்லும் இருக்கின்றதா........?
ஆம் ஆத்மியின் இந்த ஜனதா தர்பார் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் நாடகமா? அல்லது
உண்மையான நடவடிக்கையா?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-18/1/2014
(எச்சரிக்கை-இப்பதிவும் கருத்துக்கணிப்பும் எந்த அரசியல் உள்நோக்கமுமின்றி இங்கே என் இனிய இணைய நண்பர்கள் கருத்தை அறிந்துகொள்ளவே......முடிவு தனிப்பதிவாக வெளியிடப்படும் )
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |