(எச்சரிக்கை-இங்கே என் வாழ்வில் நான் கண்ட சில மரணங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கின்றேன்.......கொஞ்சம் ஒருமாதிரியான பதிவு வாசிக்க விருப்பமில்லாதவர்கள் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்
எனக்கு அப்போது விவரம் தெரியும் 8 வயது இருக்கலாம் நான் பார்த்த முதல் மரணம் என் அம்மாவை பெற்ற வயதான பாட்டியின் மரணம் படுக்கையில் பல நாட்கள் கிடந்த பாட்டி நினைவு தவறினாலும் உயிர் பிரியவில்லை பிறகு ஒரு நாள் இறந்து போனார்கள் மரணம் என்பது என்ன என்று அறிந்து கொள்ள இயலாத வயது பள்ளிக்குப் போகாமல் பாட்டி வீட்டில் மற்றச் சிறுவர்களுடன் ஓடி விளையாண்டது நினைவு
அடுத்து ஒரு மரணம்......நான் சிறுவன் என்பதால் என்னை அதைப் பார்க்கவிடாமல் விரட்டினார்கள்.......ஆனாலும் ஊரே கூடி நின்று திகிலுடன் பார்க்க நானும் பார்த்துப் பயந்துவிட்டேன் அது எங்கள் ஊரில் ஒரு பெண் குடும்பத் தகராறு காரணமாகத் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டவர்...பிரேத பரிசோதனைக்குப் பிறகு வெள்ளைத்துணியில் பொட்டலம் போல் கட்டப்பட்ட உடல்....பல நாட்கள் என் தூக்கம் போனது எங்க ஊர் கோயில் சாமியிடம் அதை மறக்கும் படி வேண்டிக்கொள்வேன்
பத்து வயதில் வடுகப்பட்டி சென்றுவிட்டேன் அது எங்கள் சிறு கிராமத்தைவிட மிகப் பெரிய ஊர்....அங்கே சுடு காட்டு வேலியோரம் காலைக்கடன் கழித்து விட்டு......வராக ஆற்றில் குளிக்க வேண்டும் தினம்தோறும் இதுவே நடைமுறையானது முதலில் சுடுகாடும் அதைச் சுற்றி உள்ள கள்ளிச் செடி புதர்களும் அங்கே அடக்கம் செய்யப்பட்ட புதை குழிகளையும் இற்றுப்போகாத மனித மண்டையோடுகளையும் காணும் போது பயமாக இருந்தாலும் அதுவே பின் பழக்கமாகிவிட்டது........மரணம் இங்கே வேடிக்கையானது
வடுகப்பட்டியிலோ இறந்தவர் உடலை ஒரு நாற்காலியில் உட்கார வைத்தும் இன்னும் சில உயர் சாதியினர் அவர்களது சாதி சங்கத்தில் உள்ள அமரர் தள்ளுவண்டியில் உள்ள இருக்கையில் உட்கார வைத்தும் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்வார்கள் இங்கே படித்த 7 ஆண்டுகளாக நிறைய இப்படிப் பட்ட மரண ஊர்வலங்களைப் பார்த்து அப்படியே பழக்கமானது
ஆனால் அங்கேயும் எனது உறவினர் சித்தப்பாவின் மரணம்......காதல் தோல்வியில் தற்கொலை விஷம் குடித்து உயிர்விட்டுவிட்டார் அவர் என் மீது ரொம்ப பாசமாக இருப்பார் அப்போது எனக்கு வயது 13.......ஆனாலும் அவரது அடக்கத்தையும் நான் பார்க்க தடுக்கப்பட்டேன்
அதற்குப்பிறகு மதுரையில் கல்லூரியில் படிக்கும் போது உடன் படித்த மாணவர் ஒருவரின் தந்தையின் மரணம் நாங்கள் நிறைய பேர் போய் கலந்துகொண்டோம்...அது ஏதோ டூர் போனது போல் இருந்தது
வயதான எனது தாத்தாவின் மரணம் வேடிக்கையாகத் தெரிந்தது அதே நேரம் எனது தாயின் மரணம் நீண்ட நாட்களுக்கு...இல்லை வருடங்களுக்கு.. ஏன் இப்போதுகூட நினைத்தால் கண்ணீர் முட்டுகின்றது.அதேநேரம் எனது தந்தையின் மரணம் ஊரில் தோட்டத்தில் மயக்க நிலையில்....சென்னையிலிருந்து நான் போவதற்குள் அடக்கம் செய்துவிட்டார்கள் அதனால் அவர் இறந்து போனார் என்ற எண்ணமே இதுவரை ஏற்படவில்லை
சென்னை வந்த பிறகு பார்த்த மரணங்கள் கொடூரமாகத் தெரிகின்றது மகள் யாருடனோ ஓடிவிட்டாள் என்பதற்காக எனது உறவினர் பெண்மணி நள்ளிரவில் தூக்கில் தொங்கி உயிர்விட்டதும் பிரேத பரிசோதனைக்காகச் சவக்கிடங்கில் காத்துக்கிடந்ததும் வேதனை என்றால் சில நாட்களில் அவரது கணவர் இரவு படுக்கையிலேயே மரணித்தது புதிராக இருந்தது
இன்னும் நிறைய உறவினர்கள் மரணம் பைக் வாகன விபத்து அதில் ஒரு கல்லூரி மாணவன் கொரட்டூரில் சிக்னல் நிறுத்தத்தில் நிற்கும் போது தள்ளு வண்டியில் ஏற்றி வந்த கம்பிகள் குத்தி சம்பவ இடத்திலேயே மரணம்
சமீபகாலங்களில் நிறைய நண்பர்கள் உடன் வேலை செய்பவர்கள் மரணம் அவர்கள் மரணம் அத்தனையும் தீர்மானித்தது டாஸ்மாக்
இப்போதெல்லாம் மரணங்கள் விளையாட்டாகப் போனது....எதுவுமே புரியாத புதிர்.............இறப்பு.
இறப்பு பற்றி நினைக்கும் போது இந்த பாடல்தான் நினைவுக்கு வருகின்றது................
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!
மரணத்தின் தன்மை சொல்வேன்;
மானிடர் ஆன்மா மரணமெய்தாது,
மறுபடிப் பிறந்திருக்கும்;
பரித்ராணாயச் சாதூனாம்,
விநாசாயச் சதுஷ்க்ருதாம்;
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய,
சம்பவாமி யுகே யுகே.
thanks-painting of soul-migration by www.rassouli.com
thanks-YouTube-by Pirasath Kumarathasn
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!
மரணத்தின் தன்மை சொல்வேன்;
மானிடர் ஆன்மா மரணமெய்தாது,
மறுபடிப் பிறந்திருக்கும்;
பரித்ராணாயச் சாதூனாம்,
விநாசாயச் சதுஷ்க்ருதாம்;
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய,
சம்பவாமி யுகே யுகே.
thanks-painting of soul-migration by www.rassouli.com
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |