google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பரதேசி கூட்டமொன்று....

Tuesday, December 31, 2013

பரதேசி கூட்டமொன்று....


பரதேசி கூட்டமொன்று
படம் காட்டி வருகுதடா...
நல்ல  பாம்பு போல
படம் காட்டி வருகுதடா...


கோடம்பாக்கத்திலிருந்து
கோலிவுட் சினிமா என்று
பரதேசி கூட்டமொன்று
படம்காட்டி வருகுதடா....

சமுதாயத்த  சீரழிக்க
சலங்கை கட்டி ஆடுதடா..
நாகரீகம் என்ற பெயரில்
நங்கைகளின் அங்கங்களை
அரைகுறை  ஆடைகளில்
கழிசடையாய் காட்டுதடா

இச்சை காட்டி
கச்சை கட்டி 
நச்சு நச்சுனு ஆடுதடா...
படம்  பார்ப்பவன்
வாயிலிருந்து
எச்சில்தான்  ஒழுகுதடா....

அறியாதவன் நெஞ்சிலே
காமத்தை கலக்குதடா...
விவரமில்லாதவன் 
வாழ்க்கையிலே
விரசத்தை  விதைக்குதடா....

பரதேசி கூட்டமொன்று
படம் காட்டி வருகுதடா...
நல்ல  பாம்பு போல
படம் காட்டி வருகுதடா...

புகைக்காதே புகைக்காதே
புத்திமதி சொல்லுதடா..
சொல்லுறவன் வாயிலத்தான்
புகையாய் புகையுதடா..
கட்டுக் கட்டா பீடி சிகரெட்
ஸ்டைலாய்  புகையுதடா..

பரதேசி கூட்டமொன்று
படம் காட்டி வருகுதடா...
நல்ல  பாம்பு போல
படம் காட்டி வருகுதடா...

வெளிநாட்டுச்  சரக்கெல்லாம்
வெள்ளித்திரையில் வருகுதடா...
வித விதமா விஸ்கி அடிக்க
விபரீதமாய்ச் சொல்லுதடா

இருப்பவனையும்
இல்லாதவனையும்
தருதலை யாக்குதடா...
தெருவோடு
தள்ளாட வைக்குதடா


பீரும் விஸ்கியும்
பொங்கி  வடியுதடா...
நாயும்  நரியும் போல்
நல்லாவே நடிக்குதடா
படம்  பார்ப்பவனையும்
ஏங்கிட வைக்குதடா

டாஸ்மாக்  கடைகளுக்கு
விளம்பரம்தான் செய்யுதடா....
அரசு  கஜானாவை நிரப்ப
அவதாரம் எடுக்குதடா....


பரதேசி கூட்டமொன்று
படம் காட்டி வருகுதடா...
நல்ல  பாம்பு போல
படம் காட்டி வருகுதடா...

நீ
எச்சரிக்கையாய் 
இல்லையென்றால்
எல்லாமே தொல்லையடா 
வாழ்க்கை  
இல்லாமல்  போகுமடா




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1