நம்மாழ்வார்-
நம் இதயங்களில்
நாளும் வாழ்ந்தவர்
என்றும் வாழ்வார்
நாளும் நம்மை
நோய் நொடியின்றி வாழ்ந்திட..
அங்கக வேளாண்மையின்
அவசியம் சொன்னவர்
இயற்கையின் கைகளில்
இணைந்திருக்க வேண்டியவர்
மானிட ஜீவிதத்தின்
வீரியம் காத்திட...
பயனற்ற
வீரிய விதைகளை
வீழ்த்திட நினைத்தவர்
நம் இதயங்களில்
நாளும் வாழ்ந்தவர்
நம்மாழ்வார்
நம்மை
அழிக்க நினைக்கும்
இரசாயன உரங்களின்
அரிப்புகளிருந்து....
அரணாக காத்திட்டவர்
இயற்கைக்கு மாறான
இரசாயன கலவையில்
பேயாட்டம் ஆடிடும்
பூச்சி கொல்லிகளை
கொன்றிட நினைத்தவர்
இயற்கை கழிவுகளுக்கும்
மறு சுழற்சி முறையில்
மறுவாழ்வு தந்தவர்
இயற்கையோடு
வாழ்ந்திடும்
மனித வாழ்வின்
மகத்துவம் உணர்ந்தவர்
இவர்
இயற்கை
விஞ்ஞானி அல்ல
இயற்கை ஞானியும் அல்ல
இயற்கையின்
அவசியத்தை ...
அறிந்து கொண்டவர்
அறிந்ததை
அனைவருக்கும்
அறிவித்தவர்.........
நம்மாழ்வார்-
நம் இதயங்களில்
நாளும் வாழ்ந்தவர்
நாளும் வாழ்பவர்
மரணத்தை வென்ற
மாமனிதர்
இயற்கை இருக்கும் வரை
இவ்வுலகில்
இருந்து கொண்டே இருப்பார்
நம்மாழ்வார்-
நம் இதயங்களில் என்றும்
வாழ்ந்துகொண்டே இருப்பார்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |