நையாண்டிக் கவிதைகள் என்பவை இலக்கியத்தில் ஒரு வகை... ஆயினும் அதன் சிறப்பு அதன் ஆக்கப்பூர்வமான சமுக விமர்சனம் ஆகும் சமுகத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ள தனிநபர்கள்,இயக்கங்கள்,இப்படிப்பட்ட வர்களின் மதியீனங்கள், சமுதாய விதி மீறல்கள் போன்றவைகளை வேடிக்கையாகச் சொல்வது போல் இருந்தாலும் அதுவும் ஒரு வகை ஆயுதம்....
சமுதாயத்தின் விஷ விருச்சங்களை வெட்டி வீழ்த்தும் கவிதைக்கோடாரி.....சமுக நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சு செடிகளைக் களையெடுக்கும் கவிதை ஆயுதம்
கேலி,கிண்டல்,மிகைப்படுத்திபாடுதல்,ஒப்பீட்டுப் பார்வை,இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள்...இப்படி பல கோட்பாடுகளை பயன்படுத்தி போராளிகள் போன்று சமுக முரண்பாடுகளைத் தாக்க பாடுபவர் செய்யும் சித்துவேளைப்பாடுகள் நிறைந்தவைகளே சிறந்த நையாண்டிக்கவிதைகள்
முன்பு பாடல்களில் மட்டுமே இருந்த நையாண்டி தாக்குதல்கள் இப்போதெல்லாம் நாடகங்கள்,கட்டுரைகள்,தொலைகாட்சி நிகழ்சிகள்,சினிமாக்கள்,...இப்படி பல்வேறு ஊடகங்களில் கொடிகட்டிப் பறக்கின்றது.....சிரிக்க வைப்பது மட்டுமே நையாண்டிக் கவிதைகளின் சிறப்பு அல்ல......சிந்திக்க வைப்பதும்
அந்தக் காலத்திலேயே தமிழில் சிறப்பான நையாண்டிக் கவிஞர்கள் உண்டு....
ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள் என்பார்கள்...அதனால் ஒட்டக்கூத்தர் அவ்வளவு கொடூரமான புலவர் அல்ல...அவரது பாடல்கள் அப்படி ஆக்ரோசமாக இருந்திருக்கலாம்
தமிழ் இலக்கியத்தில்தான் நிறைய நையாண்டிக் கவிதைகள் உள்ளன.........அவ்வப்போது அவைகளை பார்வையிடலாம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |