எழுந்து வரும் அலைகள்
கரை வந்து சேரும்போது
காணாமல் போகின்றன
நம்பிக்கையின்
போராட்டம்
வேதனையின்
பிரார்த்தனை
என்றாவது ஒருநாள்
கரை சேரும் எண்ணம்
என்றும் அழியாமல்....
மீண்டும் மீண்டும்.....
எழுந்து வரும் அலைகள்
என்றாவது ஒருநாள்
பொங்கி வரும்......
அன்று மட்டும்
அதன் பெயர் சுனாமி
அத்தனையையும்
அள்ளிக்கொண்டு.....
அப்பாவி போல்
அமைதி கொள்ளும்
இந்தக் கதை
இங்கே எதற்கு....?
இங்கேதானே
ஏய்த்துப் பிழைக்கும்
அறிவாளி அரசியல்வாதிகள்
அதிகம் பேர் இருக்கின்றார்கள்
இங்கேதானே
எது நடந்தாலும்
எழுந்து வரும் அலைகளாய்
ஆர்ப்பரித்து வருவதும்
அப்படியே
அடங்கிப்போவதும்....
அறியாமைக் கடலில்
அமைதிகொண்ட மக்கள்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |