google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: எழுந்து வரும் அலைகள்

Tuesday, October 29, 2013

எழுந்து வரும் அலைகள்


எழுந்து வரும் அலைகள்
கரை வந்து சேரும்போது
காணாமல் போகின்றன

 

நம்பிக்கையின்
போராட்டம்
வேதனையின்
பிரார்த்தனை
என்றாவது ஒருநாள்
கரை சேரும் எண்ணம்
என்றும் அழியாமல்....

மீண்டும் மீண்டும்.....

எழுந்து வரும் அலைகள் 
என்றாவது ஒருநாள்
பொங்கி வரும்...... 

அன்று மட்டும்
அதன் பெயர் சுனாமி  

அத்தனையையும் 
அள்ளிக்கொண்டு.....
அப்பாவி போல் 
அமைதி கொள்ளும் 

இந்தக் கதை 
இங்கே எதற்கு....?

இங்கேதானே 
ஏய்த்துப் பிழைக்கும் 
அறிவாளி அரசியல்வாதிகள் 
அதிகம் பேர் இருக்கின்றார்கள் 

இங்கேதானே 
எது நடந்தாலும் 
எழுந்து வரும் அலைகளாய்
ஆர்ப்பரித்து வருவதும் 
அப்படியே 
அடங்கிப்போவதும்....

அறியாமைக் கடலில் 
அமைதிகொண்ட மக்கள்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1