என் உயிரிலும் மேலான
தமிழ் மக்களே!...என்று
காதல் சினிமா எடுக்கும்
காதல் இயக்குனர்களே!
உங்கள் காதல் சினிமாவை
(வயதுக்கு வந்தாலும் சரி
வராவிட்டாலும் சரி)
உங்கள் மகனோடு
உங்கள் மகளோடு
உங்கள் மனைவியோடு...
உங்கள் குடும்பத்தில் உள்ள
பழம் கிழங்களோடு...
ஒன்றாக அமர்ந்து
ஒரு முறையேனும் பார்க்க...
உங்களுக்குத் துணிவு இருக்கிறதா..?
உங்கள் படத்தில் வரும்
காதலர்களின்
உதட்டு முத்தத்தைக் காட்டி
எங்களை மட்டும்
உசுப்பேத்துவது ஏன்....?
புனிதமான தொப்புளை
பம்பர மைதானமாக்கி
பரவசம் காட்டுவதேன்...?
உதிரத்தை
பாலாக்கி தருகின்ற
அமுத சுரபிகளை
அருவருப்பாய் காட்டி
பாலியல் வன்கொடுமைக்கு
பாலூற்றி வளர்ப்பதேன்...?
எல்லாம் போகட்டும்...
என் இனிய தமிழ் பட இயக்குனர்களே!
அந்த ஏழு நாட்கள்
படம் பார்த்து விட்டு
என் கிராமத்து அறிவிலாப் பெண்
தன் அப்பாவிக் கணவனை விட்டு
பழைய காதலனுடன்....
படுக்கைக்குப் போன
கதை தெரியுமா உமக்கு...?
காதல் படம் போட்டு
காசு சேர்த்தது நீங்கள்...
காதலனோடு ஓடிப்போய்
விபச்சார விடுதிகளில்
விற்கப்பட்ட காதலிகள்..
வாலிபச் சரக்கு
விற்று தீர்ந்தப் பிறகு...
உளுத்து போய் .
உயிருள்ள பிணங்களாய்...
இனியேனும் நீங்கள்
விழித்துக்கொள்ளுங்கள்
இன்னும் நீங்கள்
இந்தச் சமுதாயத்தின்
நல்ல கலாச்சாரத்தை
நாசமாக்கினால்.....
முதலில் நீங்கள்தான்
அபச்சாரத்தை
அறுவடை செய்வீர்கள்!
படமெடுத்தாடும்
நல்ல பாம்புகளுக்கு
வாயில்தான் விஷம்
சமுதாயத்தைச் சீரழிக்கும்
படம் காட்டும் உங்களுக்கு
உடம்பெல்லாம் விஷம்
சினிமாவை சினிமாவாக
பார்க்கத் தெரியாத
சமுதாயம் இது.
இங்கேதான்
சினிமா நாயகர்கள்
சிம்மாசனத்தில் அமரமுடியும்
நீங்கள் எடுப்பது படமல்ல.....
பாடம்....உங்களுக்கு
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |