இவர்கள்
மதம் பிடித்த
அரசியல்வாதிகள்....
அய்யோ..மக்களே
அருகில் போகாதீர்கள்
கந்தசஷ்டிக்கு
காவிவேட்டி கட்டி...
காக்க காக்க
வாய் முனுமுனுக்க..
நெற்றியில் பட்டை
கழுத்தில் கொட்டை
காவடி தூக்கி....
ஓட்டு பொறுக்கும்
இவர்கள்
அப்பன் பழனியாண்டி மாதிரி
யாமிருக்கப் பயமேன் என்று
கோவணத்தோடு ஏனோ
பவனிவருவதில்லை...?
ரம்ஜான் வந்தால்
தலையில் தொப்பி
பச்சைத் துண்டு
முகமதியர்களுடன்
முகம் மலர அமர்ந்து
நோம்புக் கஞ்சியை
தெம்பாக அருந்தி...
இப்தார் நிகழ்ச்சி என்று
புகைப்படம் எடுத்து
ஓட்டுப் பொறுக்கும்
இவர்கள்
ஒருநாள் மட்டும்
முகமதியராய் வாழ்வதேன்..?
அவர்களைப் போல்
ஆயுளுக்கும் மாறிவிட
சம்மதிப்பார்களா?
கிருத்துவர் பண்டிகை
எது வந்தாலும்
தேவாலயம் முன்பு
தேவ தூதர்கள் போல்
பேனர் வைத்து....
ஓட்டுப் பொறுக்கும்
இவர்களது
ஒரு கன்னத்தில் அறைந்தால்
இன்னொரு கன்னத்தையும்
இளித்துக் கொண்டு
காண்பிப்பார்களா...?
இவர்கள்
மதம் பிடித்த
அரசியல்வாதிகள்....
அய்யோ..மக்களே
அருகில் போகாதீர்கள்
div id="cfZoomInOut" class="zoom">
Hover on the image
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |