google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: போங்க டா நீங்களும் உங்க சட்டமும்.....

Tuesday, September 20, 2016

போங்க டா நீங்களும் உங்க சட்டமும்.....



 காய்ந்து போன பூமியெல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காய்ந்து போயிட்டால்........
குற்றவாளிகள்,ரவுடிகள்,அரசியல்வாதிகள், அரசாங்கம் தவறு செய்தால் மக்கள் காவல்துறையிடமும் நீதிமன்றத்திலும் முறையிடுவார்கள் அந்த காவல்துறையும் நீதிமன்றமுமே தவறு செய்தால்......   

 ராம்குமார் தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டான் --காவல்துறை

ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டான்--காவல்துறை

விஷ்ணு பிரியா மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் --காவல்துறை

பொறியாளர் முத்துக்குமாரசாமி மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் -காவல் துறை.

அன்புநாதன் வீட்டில் கைப்பற்ற பட்ட பணம் அத்தனையும் நத்தம் விஸ்வநாதனுக்கு மட்டுமே சொந்தம் --அமலாக்க துறை.

தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்பட்ட 570 கோடி பணம் பேங்குக்கு சொந்தமானது-- அமலாக்க துறை.

மதுரையில் கிரானைட் முறைகேட்டில் கைது செய்யப்பட்ட பி.ஆர்.பி குற்றமற்றவர் ---நீதிமன்றம்

ஜெயலலிதா சொத்து குவித்தார் என்பது உண்மையில்லை --நீதிமன்றம்

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை ---நீதிமன்றம்

குஜராத் கலவரத்தில் மோடி குற்றமற்றவர் --நீதிமன்றம்

குஜராத் கலவரத்தில் அமித்ஷாவுக்கு எந்த பங்கும் இல்லை --நீதிமன்றம்

சங்கரராமன் கொலைவழக்கில் காஞ்சி பெரியவாள் குற்றமற்றவர் -நீதிமன்றம்

சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டி பாதையோரம் உறங்கியவர்களை கொன்றார் என்பதற்கு தகுந்த சாட்சியங்கள் இல்லை, அதனால் அவர் நிரபராதி ---நீதிமன்றம்

தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுவிக்கலாம்---நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மத்திய சர்க்கார் நினைத்தால் விடுவிக்கலாம் ---உச்சநீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை தமிழக அரசு நினைத்தால் விடுவிக்கலாம் ---மத்திய அரசு

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மத்திய அரசு நினைத்தால் விடுவிக்கலாம் ---தமிழக அரசு

காய்ந்து போன பூமியெல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காய்ந்து போயிட்டால்
துன்பப்படுகிறவர்கள் தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க,அந்த தெய்வமே கண்கலங்கினா?.

#போங்க டா நீங்களும் உங்க சட்டமும்...

நன்றி....காண்டீபன் நிக்கேஷ் 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1