google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இப்படி சொதப்பிட்டியே குமாரு?

Wednesday, May 13, 2015

இப்படி சொதப்பிட்டியே குமாரு?

நீதிதேவர்,நீதியரசர்...என்றெல்லாம் போற்றப்படும் ஒரு நீதிபதியின் தீர்ப்பு இதற்கு முன்பு இவ்வளவு நையாண்டித்தனமாக ட்விட்டரில்,முகநூலில்  விமர்சிக்கப்படவில்லை

நீதிக்காக தன் மகனையே தேர்காலில் இட்டு தண்டனை வழங்கிய தமிழ் நீதி அரசர் வாழ்ந்த இந்த நாட்டில் ஒரு நீதிபதியின் தீர்ப்பு விமர்சிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை

அரசியல் வல்லுனர்கள்,சட்டவல்லுனர்கள்....ஒரு நீதிபதியின் தீர்ப்புக்கு கருத்து சொல்ல சட்டம் இடம் தரவில்லை ஆனால்  சமுக வலைதளங்களில் உலா வரும்  அறிவுஜீவிகளின் நக்கலையும் விக்கலையும் யார் தடுப்பது..?



ரா குமார்@Raaa_kumar 
J வழக்கில் மேல்முறையீடு:களத்தில் விஜயகாந்த்! #சாமி தீர்ப்ப மாத்திசொல்லு, இல்ல தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க



காந்திதேவா@GhandhiDeva 
கடைசில சாமியையும் நம்பாத, சாமினு பேருவச்சவனையும் நம்பாதனு சொல்றானுக 



சிந்தனைவாதி @PARITHITAMIL 
சிரிப்பு திருடன்,சிரிப்பு போலிஸ் வரிசையில் சிறப்பு நீதிபதிய சிரிப்பு நீதிபதியையும் ஆக்கிப்புட்டிங்கலைய்யா


pappu@dreams4485 
கணக்கில காட்டிய செருப்புகள் கல்யாணத்துவந்தவர்கள்கழட்டி போட்டவை......
அப்பகணக்கிலகாட்டிய புடவையும் வந்தவங்க அவுத்துப்போட்டுட்டு போனதா fb

Anwar sait@dheeviran 
முன்னாடிலாம் ஆட்டைய போட்டா காந்தி கனக்குன்னு சொல்லிட்டு போவானுங்க.... இனி கு..சாமி கனக்குன்னு சொல்லுவானுங்களே..
யுவன் பிரபாகரன் fb 
இப்படி எல்லாம் ஜட்ஜுக ஆளாளுக்கு ஒன்னு சொல்லுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா நம்ம கலா மாஸ்டர ஜட்ஜா போட்ருக்கலாம்..சும்மா கிழி கிழின்னு கிழிச்சு, கெமிஸ்ட்ரிய ஒர்க் அவுட் பண்ணி தீர்ப்ப சொல்லி இருப்பாங்க..
புல்லட் ஜாக்கி™@BulletJackie 
புடவை செருப்பு நெறைய வச்சிருந்தா குற்றவாளியா இதுக்கு ஒரு கேஸ்னு கு சாமி காரி துப்பிட்டார் சு சாமி மூஞ்சில

சி.பி.செந்தில்குமார் @senthilcp 
சார்.இந்த பால் உங்களுக்குத்தான் குடிங்க. அய்யோ.நான் மாட்டேன்.அதுல விஷம் கலந்திருக்கு. சார். 8.5% விஷம் தான் கலந்திருக்கு.அது தப்பில்லை


சிந்தனைவாதி @PARITHITAMIL  
-அக்கா நாம வசமா மாட்டிக்கிட்டோம் அந்த கூருக்கெட்ட குமாரு கணக்க தப்பா போட்டு நம்மள தப்பிக்க வுடுற மாதிரி நல்லா போட்டு குடுத்துட்டாரு #பபி



சில்லுண்டி|@iindran 
கு சாமி ரொம்ப கறாரான ஆசாமினு ஜூவில வாரத்துக்கு ரெண்டுவாட்டி எழுதுனாய்ங்க.. இம்பூட்டு கறாரா ஹ்ம்ம்

சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe 
கு சாமின்னா கணக்கு வாத்தியார்னு நெனச்சிட்டு இருக்கீங்க, அதான் இல்ல அவரு நீதிபதி மட்டும் தான்

சிந்தனைவாதி @PARITHITAMIL 
தீர்ப்போட 999ம் பக்கத்துல... அந்த 4பேருக்கும் பாரத ரத்னா தந்து கவுரவிக்க வேண்டும்னு எழுதியிருந்துச்சாம் ! அதமட்டும் காணலையாம் சாவுங்கடா...

 
உடன்பிறப்பே @udanpirappe 
அந்த 4 பேரும் கைச்செலவுக்கு பணம் இல்லைனு கேட்டிருந்தா கூட ,அதையும் நம்பி இந்தாளு ஆளுக்கு 2000எடுத்து கொடுத்திருப்பார் போல !

சிந்தனைவாதி @PARITHITAMIL 
திருப்பதிக்கு போயிட்டு வந்துதான் தீர்ப்பு  ஜட்ஜு அய்யா எழுதினாராம் அதுதான் நாங்களும் பக்தராயிட்டோம் கோவிந்தா.கோவிந்தா  

CrAzY boy THANUSH @CrAzYboyTHANUSH 
துல்லியமாக கணக்கு போட ... . . . 
வாங்குவீர் கு சாமி கால்குலேட்டர் 

ஜானகிராமன்@saattooran 
என்ன ஓரே கூட்டம். மாலை மரியாதை, ஆர்ப்பாட்டமா இருக்கே.. அதுவா நம்ம 20 கொலை செய்த கபாலிக்கு இன்னைக்கு தீர்ப்பு நாள் !!




காண்டீபதாரி @kanal4793 
நல்ல வேல வருமானத்துக்கு குறைவா சொத்து வெச்சிருக்குரவிங்கேலே புடிச்சு உள்ள போட சொல்லல.. . . . நீதியரசர் வாழ்க



குறிப்பு-இங்கே நீதியரசர் கு சாமி என்பவர் கி.மு 6 நூற்றாண்டில் லெமுரியா நாட்டில் வாழ்ந்த மகான் என்பதை மிகுந்த வரலாற்று ஆய்வுடன் சொல்லிக்கொள்கிறேன் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1