கற்பனையில் பறப்போம்
கவிதைகளை படைப்போம்
கவலைகளை மறப்போம்
காயங்களை துடைப்போம்
தன்னம்பிக்கையில்
மிதப்போம் வா....
தடுமாற்றத்தை
தவிர்ப்போம் வா.......
மனிதாபிமானத்தை மறந்துவிட்ட
மதக் கடவுள் வியாதிகளை
நம்ப வேண்டாம்........
அநியாயத்தை விதைக்கும்
அரசியல்வாதிகளுக்கும்
அடிபணிய வேண்டாம்
சிந்தனையை மழுங்கடிக்கும்
சினிமா நடிகனக்கும்
அடிமையாக வேண்டாம்
பறப்போம் மறப்போம்
தன்னம்பிக்கையில்
மிதப்போம் வா....
தடுமாற்றத்தை
தவிர்ப்போம் வா.......
இந்த நிலை எவருக்கும் வேண்டாம்.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |