google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஒபாமா வச்ச ஆப்பு கி பார் மோடி....

Tuesday, January 27, 2015

ஒபாமா வச்ச ஆப்பு கி பார் மோடி....


இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக கடந்த 3 நாட்களாக இந்தியாவில் முகாமிட்டிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பயணத்தின் நிறைவுப் பகுதியில் மதச் சுதந்திரம் பற்றி பேசி.........ஒபாமா வச்ச ஆப்பு கி பார் மோடி


நம் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள்  ஒபாமாவுக்கு தன் கைப்பட டீ தயாரித்து வழங்கி நீண்ட காலமாக இழுபறியில் கிடந்த அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு தீர்வு கண்டார் 

நம் அணுஉலைகளுக்கு தேவையான எரிசக்தி இனி அமெரிக்காவிலிருந்து தாராளமாக கிடைக்கப்பெற்று இந்தியா இனி ஒளிரும் 

இந்தவகையில் ஒபாமா அமெரிக்க யுரோனியம் வியாபாரியாக இந்தியாவில் விற்பனையை துவக்கிவைத்துள்ளார்  என்று சில அரசியல்வாதிகள் முனுமுனுக்க.........

அதுக்கும் மேல....


ஒபாமா தன் இந்தியப் பயணத்தின் நிறைவுப் பகுதியில் பேசும் போது...

 இந்தியா மத சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் 
ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் விரும்பும் மதத்தின் மீது நம்பிக்கை கொள்ள முழு உரிமை உண்டு. மத ரீதியாக பிளவுபடாத வரை இந்தியாவின் வெற்றி தடைபடாது......என்று  ஒபாமா மோடிக்கு வச்சாரு பாரு ஆப்பு 

மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு சில இந்து அமைப்புகள்  சில மத்திய அமைச்சர்கள் எம்பிக்கள் ஆதரவுடன் மறு மதமாற்றம்,சம்ஸ்கிருத திணிப்பு...போன்ற இந்துத்துவா  கொள்கைகளை செயல்படுத்தி வரும் நிலையில்.........

 ஒபாமாவின் மத சுதந்திரம் பற்றிய பேச்சு மோடியையும் அவரது அரசையும் நையாண்டித்தம் செய்வது போல் உள்ளது 

ஒபாமாவின் மத நல்லிணக்கப் பேச்சு............
 அறிவுரையா...?  அவமரியாதையா...?  அச்சுறுத்தலா...?




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1