ட்விட்டர் உலகத்திலும் தங்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பை டிவிட்டாக பதிவிடும் கவிஞர்கள் ஏராளம்....
இங்கே சில ட்விட்டர் கவிஞர்களின் கவிதை டிவிட்ட்கள்
திட்டிக்கொண்டே
ஜடை பின்னுவதும்...
அழுது கொண்டே
அம்மாவிடம் தலையை கொடுப்பதும்
தாய் மகள் உறவில் ....
திகட்டாத சிறுகதை!
கடற்கரையில்
இறுகப்பற்றி காதல் பேசிய உன் கரம்...
சாலையைக் கடக்கும் நொடிகளில்
தாய்மை பேசுகிறது
நீ என் கன்னத்தில் முத்தமிடும்போதுஉன் மூச்சுக்காற்று வந்து தீண்டும்
அந்த அற்ப சுகத்திற்காக
ஏங்குதடி என் காது மடல்.
என்னோடு நீ
இருந்தாலும்
இல்லை என்றாலும்
மண்ணோடு புதையும்
வரை
நெஞ்சோடு
வைத்திருப்பேன்
உன்
நிணைவுகளை .....
குழந்தை இல்லா தொட்டில்கள்
கோவில் மரத்தில்...
அன்னை இல்லா குழந்தைகள்
அநாதை இல்லத்தில் ...

என் செவிகள் மட்டும்
கேட்கும் சங்கீதங்களாய் உன் சிரிப்பு,
வெற்றிடமாய் இருக்கும்
உன் இதயத்திற்குள்
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது...!
ப்ரியா சுப்ரமணியம்
@priya1subramani
காற்றழுத்தத் தாழ்வு மனப்பான்மையால்
கண்ணீர் உகுக்கிறான் வருணதேவன்
சுயபச்சாதாபத்தில்.
வீடு வரை WiFi
வீதி வரை 3G
காடு வரை 2G
கடைசி வரை No Signal !

இறந்த காதல்களை புதைப்பதற்கு
ஒவ்வொரு இதயத்திலும்
ஒரு சுடுகாடு இருக்கிறது
அதில் ஒருநாள் பூக்களும் பூக்கும்!
நன்றி.....ட்விட்டர் நண்பர்களுக்கு பதிவின் நீளம் கருதி சில ட்விட்டர்கள் மட்டுமே இங்கே இடம்பிடித்துள்ளனர் ....இன்னும் வரும்
தங்கைக்கு குளியல்.
தந்தைக்குக் கவலை.
தாய்க்கு தூக்கம்.
நாய்க்குட்டிக்கு நடுக்கம்.
எனக்கு மட்டும் கவிதை..
-இம்மழை..
அக்காவுடன் பிறந்த தம்பிகளுக்கு மட்டுமே தெரியும் அக்காவுக்கு இன்னொரு பெயர்..........அம்மா pic.twitter.com/QVg2jo2X8y
— சிந்தனைவியாதி (@PARITHITAMIL) November 24, 2014
நன்றி.....ட்விட்டர் நண்பர்களுக்கு பதிவின் நீளம் கருதி சில ட்விட்டர்கள் மட்டுமே இங்கே இடம்பிடித்துள்ளனர் ....இன்னும் வரும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |