google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டர் கவிஞர்கள்

Thursday, November 27, 2014

ட்விட்டர் கவிஞர்கள்



ட்விட்டர் உலகத்திலும் தங்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பை டிவிட்டாக பதிவிடும் கவிஞர்கள் ஏராளம்....
இங்கே சில ட்விட்டர் கவிஞர்களின் கவிதை டிவிட்ட்கள்



இளந்தென்றல் @Elanthenral 
திட்டிக்கொண்டே 
ஜடை பின்னுவதும்... 
அழுது கொண்டே 
அம்மாவிடம் தலையை கொடுப்பதும் 
தாய் மகள் உறவில் .... 
திகட்டாத சிறுகதை!



சௌம்யா @arattaigirl 
கடற்கரையில் 
இறுகப்பற்றி காதல் பேசிய உன் கரம்... 
சாலையைக் கடக்கும் நொடிகளில் 
தாய்மை பேசுகிறது

Ajithkumar Actor @thalatweets 
நீ என் கன்னத்தில் முத்தமிடும்போது
உன் மூச்சுக்காற்று வந்து தீண்டும்
அந்த அற்ப சுகத்திற்காக
ஏங்குதடி என் காது மடல்.


Sehwag Prabha @SehwagPrabha 
என்னோடு நீ இருந்தாலும் 
இல்லை என்றாலும் 
மண்ணோடு புதையும் வரை 
நெஞ்சோடு வைத்திருப்பேன் 
உன் நிணைவுகளை .....

ஏஞ்சலின் (Angel) @Lin31183 
குழந்தை இல்லா தொட்டில்கள் 
கோவில் மரத்தில்... 
அன்னை இல்லா குழந்தைகள் 
அநாதை இல்லத்தில் ...

ஆன்டனி @MaGeShAnToNy 
என் செவிகள் மட்டும் 
கேட்கும் சங்கீதங்களாய் உன் சிரிப்பு, 
வெற்றிடமாய் இருக்கும் உன் இதயத்திற்குள் 
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது...!

பேயோன் @ThePayon 
காற்றழுத்தத் தாழ்வு மனப்பான்மையால் 
கண்ணீர் உகுக்கிறான் வருணதேவன் 
சுயபச்சாதாபத்தில்.

திருட்டுகுமரன் @ThirutuKumaran 
வீடு வரை WiFi 
வீதி வரை 3G 
காடு வரை 2G 
கடைசி வரை No Signal !

ப்ரியா சுப்ரமணியம் @priya1subramani 
இறந்த காதல்களை புதைப்பதற்கு 
ஒவ்வொரு இதயத்திலும் 
ஒரு சுடுகாடு இருக்கிறது 
அதில் ஒருநாள் பூக்களும் பூக்கும்!


தமிழினி @manju_twits 
தங்கைக்கு குளியல். 
தந்தைக்குக் கவலை. 
தாய்க்கு தூக்கம். 
நாய்க்குட்டிக்கு நடுக்கம். 
எனக்கு மட்டும் கவிதை.. -இம்மழை..



நன்றி.....ட்விட்டர் நண்பர்களுக்கு பதிவின் நீளம் கருதி சில ட்விட்டர்கள் மட்டுமே இங்கே இடம்பிடித்துள்ளனர் ....இன்னும் வரும் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1