google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கவிஞனின் காதலி

Sunday, June 29, 2014

கவிஞனின் காதலி

காதல்-
அகராதியில்  
இரண்டு உடல்கள் வசிக்கும் 
ஓர்  ஆன்மா
காதல்-
இதயங்களில்  
பற்றிக்கொள்ளும்
ஒரு வித  நெருப்பு 
தொடக்கத்தில் சுடும் 
போகப் போக..ஒளிரும்


உன் காதல்
என்னுள் 
ஏராளமான மின்சாரத்தை 
உருவாக்கிவிட்டது

நீ உற்று பார்...
என்  முகத்தில் தெரியும்
கடலில் தத்தளிக்கும் 
படகோட்டியின் பரிதாபம் 

உன் 
பார்வையின் 
வல்லமை.....பார்
ஒரு நொடியில் 
 உருமாறி விட்டேன்
கைகள்  இரண்டும் 
இறக்கைகளாய்....
உயர உயர
பறக்கின்றேன் 





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1