google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஜெயலலிதா பிரதமரானால் எப்படியிருக்கும்?

Saturday, April 26, 2014

ஜெயலலிதா பிரதமரானால் எப்படியிருக்கும்?


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 40 இடங்களிலும் வென்று மூன்றாவது அணியின் ஆதரவால் ஜெயலலிதா பிரதமரானால் எப்படியிருக்கும் என்ற கற்பனை நகைச்சுவைப் பதிவு.....

பாஜக-காங்கிரஸ் இருவருக்கும் முழு வெற்றி கிடைக்காததால் தமிழ்நாட்டில் 40 இடங்களிலும் வென்ற அதிமுக அம்மா அவர்களை அவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தும் மூன்றாவது அணியினர்  பிரதமராக்கினர்

வேண்டாவெறுப்பாக அம்மாவும் பிரதமராக சம்மதித்ததுடன் தன் 40 எம்பிக்களில் 39 பேரை  மத்திய அமைச்சர் ஆக்கினார்கள்(40 பேரையும் மந்திரியாக்கினால் அலிபாபாவும் 40 திருடர்களும் என்று யாரேனும் கேலி செய்யலாம் என்று சோ...சொன்னதால் ஒருவருக்கு கல்தா)

முதல் பாராளுமன்ற கூட்டம் அனைவரும் அமர்ந்திருக்க அம்மா என்ட்ரி......பாராளுமன்ற கட்டிடமே அதிர மேஜையில் டமால்...டமால்...என்று தட்டி பாரத மாதா ஜெ...க்கு ஜெ....என்று வீர முழக்கம்  


பிரதமர் நாற்காலியில் அம்மா அமர்ந்திருக்க 40 எம்பிக்களும் வரிசையாக தரையில் விழுந்து தரையோடு தரையாக நகந்து அம்மா நடந்து வந்த பாதையில் கிடந்த மண்ணை எடுத்து .......எஜமானி காலடி மண்ணெடுத்து நெற்றியில பொட்டு வைப்போம் என்று பாடிக்கொண்டே நெற்றியில் தடவிக்கொண்டார்கள் 

அப்புறம் ஒவ்வொருவராக அம்மா பாட்ஷா ரஜினி ஸ்டைலில் அமர்ந்திருக்க அவரது செருப்பை முத்தமிட்டு மரியாதை செய்தார்கள் 


இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மோடி கோபத்தில் கையை நீட்டி நாக்கை கடித்து ஆப் கி பார் ...என்று இந்தியில் ஏதோ சொல்ல.......அம்மாவுக்கோ தமிழ்நாடு சட்டசபையில் கேப்டன் விரலைக் காட்டி விவகாரமாக பேசிய பிரமை

அம்மாவோ சபாநாயகரைப் பார்க்க அடுத்த நிமிடமே காவலர்கள் மோடியை தர தரவென்று இழுத்து வெளியே போட்டார்கள் இன்னும் 5 ஆண்டுக்கு மோடியும் பாஜக எம்பிக்களும் பாராளுமன்ற வளாகத்துக்குள் வரக்கூடாது என்றும் அவர்களுக்கு எம்பிக்களுக்கு உள்ள எந்த சலுகையும் கிடையாது என்றும் சபாநாயகர் தீர்ப்பளித்தார்..........

இந்த காட்சியை பார்த்துக்கொண்டு இருந்த மற்ற உறுப்பினர்கள் அனைவரும் எங்கே நமக்கும் இந்த நிலைமை வந்துவிடுமோ என்று அச்சத்துடன் பாரத மாதா  ஜெ....கி ஜெ...என்று கோரசாக முழங்கினார்கள் 

அடுத்து  பிரதமர் அம்மாஜி அவர்கள் தமிழ் நாட்டு அம்மா உணவகம்-அம்மா குடிநீர்-அம்மா போதை நீர் போன்ற   திட்டங்கள் சிலவற்றை இந்தியா முழுவதும் அமுல்படித்தி அறிவித்திட..........

பாராளுமன்ற கூட்டத்திற்கு  அம்மாஜியால்  டெல்லி வரை இவ்வளவு தூரம் எலிகாப்டரில்  பறந்து வர முடியாததால் பாராளுமன்ற கட்டிடத்தை பிடுங்கி கொடநாடு சுடு காட்டுக்குள் வைக்க இருப்பதால்.....

அடுத்த பாராளுமன்ற கூட்டம்  எப்போது என்று தெரியாத காலவரையற்ற விடுமுறையுடன் சபை முடிந்தது

 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1