google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அம்மா ஆட்சி சும்மா ஆட்சியா?

Wednesday, March 12, 2014

அம்மா ஆட்சி சும்மா ஆட்சியா?


யானைப்படை,குதிரைப்படை போன்று இணையதளப் படை வைத்திருக்கும் தளபதியாரே! எந்தப் படையும் இல்லாத எங்க அம்மா ஆட்சியை சும்மா ஆட்சி என்று சொல்லி இணையதள யுத்தம் நடத்துவது சரியா...?




























கொடநாடு  கண்ட எங்க தமிழ்நாடு அம்மா ஆட்சியைப் பற்றி கேளீர்.....

-தனியொரு மனிதருக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழிப்போம் என்று பாடிய பாரதியின் கனவை நிறைவேற்ற இலவசமாக இருபது கிலோ அரிசி வழங்கி இல்லாதோர் வாழ்வை வழமாக்கும்  அன்னமிட்ட அன்னையின்  ஆட்சி சும்மாவா?

-உழைக்கும் மக்களுக்கும்  பிரமச்சாரி மேன்சன் மக்களுக்கும் உதவிட கொள்ளையடிக்கும் ஓட்டல் பவன்களை ஒழித்திட மலிவு விலையில் இட்லியும் சப்பாத்தியும் தரும் அம்மா உணவகம்  கண்ட அம்மா ஆட்சி சும்மாவா?

-உழைத்த களைப்பு தீர கள்ளச் சாராயம் குடித்து மாண்டோர் ஏராளம் இன்று  நல்ல வெளிநாட்டு சரக்குகள் டாஸ்மாக் மூலம் தாராளம் அதனால் அழிந்தது சாராய முதலாளிகளின் வண்டவாளம் இன்னும் ஆரோக்கிய வாழ்வுக்கு அம்மா குடி நீர் தந்து குடிமக்கள் ஆட்சி செய்யும் அம்மா ஆட்சி சும்மாவா?

அய்யா தளபதியாரே! மாணவ-மாணவிகளுக்கு இலவச கணணி வழங்கி பல லட்சம் இணையதள போராளிகளை உருவாக்கி வைத்திருக்கும் எங்க அம்மாவே பெரிய இணையதளம் நீவீர் அம்மாவோடு  இணைய யுத்தம் செய்ய நினைத்தால்............

 எங்க அம்மா படை வீரர் மேயர் சைதை அண்ணன்  நாளையே அம்மா இலவச இணையகம் என்று வீதிக்கு வீதி ஆரம்பித்து.......... 
அம்மா  இணைய படை திரட்டி வந்தால்.......
அப்போதும்  சொல்வீர்களா அம்மா ஆட்சி சும்மா ஆட்சி என்று..?





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1