google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கனவில் வந்தார் சாக்ரடீஸ்......

Wednesday, February 12, 2014

கனவில் வந்தார் சாக்ரடீஸ்......

நேற்று கனவில் வந்தார்
கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்
கிறங்கிப்போச்சு என் தலையும்

நான் பெற்ற அவஸ்த்தையை
நீங்களும் பெறவேண்டுமெனில் 
மேலும் படியுங்கள்..... 

http://4gymzografou.files.wordpress.com/2014/01/socrates.jpg%3Fw%3D513%26h%3D310

அன்பும் அம்பு போன்றதுதான்
நம்மைவிட்டுப் போனது
நம்மிடம் திரும்ப வராது.

 

நண்பர்களால்
காயம்படும் போதும்
மன்னித்துக்கொண்டிருந்தால்
நம்மை நல்ல நண்பன் என்பார்கள்

 

ஒரு நொடியில் செய்த தவறு
ஆயுசுக்கும் நம்மை அச்சுறுத்தும்

 

நேசித்தவர்களைப் பிரியும்போது
அன்பான வார்த்தைகளை
விதைக்கவேண்டும்
என்றாவது ஒருநாள் சந்திக்கும்போது
அவை கனி தரும் மரமாயிருக்கும்

 

கொஞ்ச நேரம் நடை பயின்றால்
நிறைய நேரம் நலம் தரும் உடலுக்கு
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால்
நிறைய நேரம் ஆனந்தம் தரும் உள்ளத்துக்கு

 

சிலநேரங்களில் நம் கோபம்
நியாயமாகத் தெரியும்....
அதற்காக ஆத்திரப்பட்டால்
அநியாயத்தில் முடியும்

 

நம்மை நாமே
மன்னிக்க தெரிந்தால்
அடுத்தவர்களை
மன்னிக்க முடியும்

 

அடுத்தவரின் ரகசியத்தை
அறிந்திட துடிப்பவன்
தனது ரகசியங்களை
பாதுகாக்க தெரியாது

 

 

 

 

 

 

 

 

 

 

(யப்பா.....போதும்பா....
இதுக்கு மேலும் வேண்டாமப்பா
இப்போதுதான் தெரிகிறது
ஏன் அவரை கொன்றார்கள்
விஷம் கொடுத்து என்று)
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1