google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கமிஷனர் அலுவலகமா? சினிமா ஸ்டுடியோவா?

Friday, February 7, 2014

கமிஷனர் அலுவலகமா? சினிமா ஸ்டுடியோவா?

கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வாங்கும் திட்டத்தால் மக்களுக்கு உடனடி பலன் கிடைத்தது...மரியாதையுடன் அங்கேயும் இந்த சினிமாக்காரர்கள் தங்கள் தொப்புள் விவகாரம்,ஓடிப்போகுதல்..போன்ற புகார்களால் தங்களுக்கு விளம்பரம் தேட குவிந்து அதையும் சினிமா ஸ்டுடியோ போன்று....

Made with FreeOnlinePhotoEditor.com  

போலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்க போகின்றவர்களுக்கு கிடைக்கும் மரியாதையைவிட  கமிஷனர் அலுவலகத்தில் வரும் பொதுமக்களுக்கு குளு குளு அறையில் அமரவைத்து தேனீர் கொடுத்து உபசரித்து அவர்களது புகார்கள் வாங்கி உடனுக்குடன் பரிசீலிக்கப்படும் இதனால் இங்கே புகார் மனு கொடுக்க பொதுமக்கள் கூட்டம்

ஆனாலும் இங்கேயும் இந்த சினிமாவாதிகள் புகுந்து இந்த நல்ல திட்டத்தை சீரழித்து விட்டார்கள்

GlitterPhoto

சமீபத்தில் நஸ்ரியாவின் தொப்புள் விவகாரம் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான செய்தியாக நாளிதழ்கள் வெளிவந்து நய்யாண்டி படத்துக்கு விளம்பரமானது அஞ்சலி ஓடிப்போன கதையும் இன்னும் முடியவில்லை சமீபத்திய உச்சகட்ட காட்சியாக வனிதா எம்ஜியார் சிவாஜி ரஜினி கமல் படத்திற்கு பாதுகாப்பு...? கேட்டது 

இதற்காக கமிஷனர் அலுவலகத்தில் லைட் கேமரா ஆக்சன் என்று சொல்லாதக் குறையாக கையில் மைக் வீடியோ சாதனங்களுடன் உண்மையான நிருபர்கள் கூட்டம் ஒருபுறம் அதிலும் போலிகள் நடமாட்டம் கலப்படம்

என்னக் கொடுமையடா இது? இப்படியே போனால் இனி எல்லா படங்களுக்கும் பூஜையே கமிஷனர் அலுவலகத்தில் போட ஆரம்பித்துவிடுவார்களோ....? என்று நினைக்க தோன்றியது

ஆனால்...கமிஷனர் விஜயகுமார் அய்யா அவர்களால் துவக்கப்பட்டு கமிஷனர் நடராஜ் அய்யா அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு இன்றுவரை...சாரி...நேற்றுவரை நடைபெற்றுக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு  சிறப்பாக பயன்பட்ட  இத்திட்டம் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையால் நிறுத்தப்பட்டு உள்ளது.....ஆனாலும் சில புகார்களுக்கு விலக்கு உண்டு என்று.........

எனக்கு பழக்கமான நண்பர்கள் உயர் அதிகாரிகள் கமிஷனர் அலுவலகத்தில் இருப்பதால் சில நேரம் நட்பு விசயமாக அவர்களை சந்திதத்தும் உண்டு.......

சமீபத்தில் ஒரு நண்பரின் டெலிவரி ஆட்டோவை ஒரு லட்சம் மதிப்புள்ள சரக்குடன் யாரோ விஷமிகள் கடத்திவிட சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அவர் மூன்று நாட்களாக அலைந்தும் எதுவும் கிடைக்காத நிலையில்...எனது நண்பர் உயர் அதிகாரி மூலமாக கமிஷனர் அலுவலகத்தில் தெரிவித்தப்போது.........அடுத்தநாளே மிக விரைவாக செயல்பட்டு சரக்கு இல்லாத வண்டி மட்டும் கிடைத்தது...

இப்படி  நிறைய வேலைகள் விரைவாக நடக்க கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுப்பது பொது மக்களுக்கு உதவியாக இருந்தது இப்போது இல்லை என்பது கொஞ்சம் வேதனை.........


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1