காதல் கவிதைகள்
நெஞ்சம்
மஞ்சம்
தஞ்சமென்று
கொஞ்சும் கவிதைகள்
அவள்-
பீரும்
விஸ்கியும்
கலந்து வைத்து
உறைந்து போன
போதைக் கட்டி
நான்
அவளை நினைத்து
உருகிப் போன
சக்கரைக் கட்டி
பார்த்தாலே
போதை ஏறும்
அய்யோ...
அவளை
பருகினால்
என்னவாகும்........?
சூரியனைச் சுற்றும்
பூமியும்
சற்றே நின்று பார்க்கும்
அசந்தால்
அவளையே சுற்றும்
அதீத வேகமெடுத்து...?
ஆக..... மொத்தம்
அவள்
போதை ஊட்டும்
டாஸ்மாக் பேரழகி
இல்லை
இனி....யவள்-என்
இனியவள்
இல்லையென்றால்.....
இனியவை இல்லையே
என் வாழ்வும்
எனக்குத் தொல்லையே
எனக்கு மட்டும்
காதலிக்க
சொல்லித்தந்த
காதல் கடவுள்...
அவளுக்கு மட்டும்
அதை
சொல்லித்தராமல்
சென்றது எங்கே.....?
(அட...
ஆக்கம் கெட்ட கூக...
அவல நினைச்சு
உரல உடைச்சது
அவள் அல்ல
நீ
உண்மையான
டாஸ்மாக் போதையில்
தலைகீழாய்
மிதந்த போது...
அவளது
அழகில் மயங்கிய
காதல் கடவுளும்
கடத்திப் போய்விட்டான்
உனக்கு
அல்வா கொடுத்து...
அவளைக்
கிடத்திப் போய்விட்டான்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |