google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பேஸ்புக்,ட்விட்டர்...இந்த சமுதாயத்திற்கு தேவையா?

Monday, January 6, 2014

பேஸ்புக்,ட்விட்டர்...இந்த சமுதாயத்திற்கு தேவையா?




பேஸ்புக்,ட்விட்டர்...போன்ற சமுக வலைத்தளங்களால் இந்த சமுதாயத்திற்கு நன்மையா..? இது போன்றவைகள் நமது இந்திய சமுதாயத்திற்கு தேவையா? என்பது பற்றி சிறு ஆய்வும் கருத்துக்கணிப்பும்............






உலகெங்கிலும் சமீப 6 ஆண்டுகளில் 1+பில்லியன் பயனர்களுக்கு மேல்  கொண்டுள்ள பேஸ்புக் சமுக வலைப்பின்னல் தளம்...
அதேபோல்  140 மில்லியனுக்கும் மேல் பயனர்கள் உள்ளதாகச் சொல்லும் ட்விட்டர் வலைதளம் சமீப ஆய்வுப்படி (ஏப்ரல  2012 வரை) ஒரு நாளைக்கு 340 மில்லியன் டிவிட்கள் புதிதாக தினந்தோறும் தோன்றுவதாக அறிவிக்கின்றது.....



இப்போது ஓராண்டுகளாக இந்தியாவிலும் இவர்கள் இருவரின் போட்டா போட்டி ஆட்சி.....
முன்பெல்லாம் ஒரு நட்பு வட்டத்தை வளர்த்துக்கொண்டிருந்த இந்த சமுக வலைதளங்கள் இப்போதெல்லாம் அதன் சிறப்பு தன்மையை இழந்துவிட்டதுஇதற்கு காரணம் சமுதாயத்திற்கு  நல்லதும் கெட்டதுமாக இருக்கும் அரசியலும் சினிமாவும் இந்த வலைதளங்களில் நுழைந்தமையே காரணம் 
 

இவைகளால் இந்த சமுதாயத்திற்கு உண்டாகும் நன்மைகள் ஒருபுறம் வெளிச்சமாகவும் அதனால் உண்டாகும் தீமைகள் இன்னொருபுறம் இருண்ட பக்கங்களாகவும் இருக்கின்றது.........

இலவசமாகவும் எளிதாகவும் உள்ள இந்த சமுக வலைத்தளங்கள் உலகில் பல்வேறு இடங்களில் உள்ள மக்களுடன் இணைய முடிகிறது  அவர்களது கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் அறியமுடிகின்றதுஅதேநேரம் பல கலாச்சார சீரழிவுக்கும் காதல் பேரழிவுக்கும் காரணமாக உள்ளது

காணாமல் போனவர்களையும் கண்டுபிடித்து தருகின்றது நல்லா இருப்பவர்களையும் காணாமல் போகச் செய்கின்றது

சில வெளிநாடுகளில்அரசியல் ஆட்சிமாற்றங்களுக்கும் சமூகப் புரட்சிகளுக்கும் காரமாக இருந்துள்ளது
இங்கே தமிழ்நாட்டில் கூட சமிபத்திய மாணவர் போராட்டம் வலுப்பெற காரணமாக இருந்தது ட்விட்டர் வலைத்தளம்



அதே நேரம் தனிமனித தாக்குதலும் அவதூறு பேச்சுகளும் தொடர்ந்து.......கடப்பாரையை விட கொடுமையாக  பல குன்டூசிகளை சேர்த்து குத்துவது போல் உள்ளது என்பதை  இந்த ட்விட்டர் கீச்சுக்களால் முகநூல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அறிவர்

அப்படி  தொல்லை என்றால் டிவிட்டரில் தொடர்வதை நிறுத்திக்கொள்...முகநூலில் கணக்கை முடித்துக்கொள் என்று சொல்லலாம் அறிந்தவர்களுக்கு அது எளிது அறியாதவர்களுக்கு.......?



இந்த சமுக வலைதளங்களால்.....
ஒபாமாக்களுக்கு ஒட்டு கிடைக்கும் 
மோடிகள் தங்கள் முகத்துக்கு தங்க முலாம் பூசலாம் 
கலைஞரின் உடன்பிறப்பு கடிதங்கள் கடித்து குதறப்படலாம்  
வியாபார நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் விற்பனை வளர்ச்சிக்கு வழி தேடலாம் 
சினிமா பிரபலங்கள் தங்கள் பெருமையை பீற்றிக் கொள்ளலாம் அப்படி பீற்றுவதை தூற்றுவோரை அவதூறு சிறையில் அடைக்கலாம்

இதைத் தவிர இந்த சமுக வலைத்தளங்கள் சமுதாயத்திற்கு என்ன நன்மை செய்கின்றன இவைகள் இலவசமாக கிடைப்பதினால்தானே இந்தத் தொல்லைகள் காசு...துட்டு...பணம்...MONEY...என்றால் இந்த சமுக வலைத்தளங்கள் கட்டுக்குள் வருமா....? போலிகள் போக்கற்று போவார்களா...? முகநூல் முகமூடிகள் கழற்றப்படுமா....?

இந்த பேஸ்புக்,ட்விட்டர்...போன்ற சமுக வலைதளங்கள் நமது இந்திய  சமுதாயத்திற்கு தேவையா? 




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1