எப்பவோ நம்ம சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி, பிரதமர் மன்மோகன் சிங் அதிரடியாக அடிச்சி விட்டாரு அய்யா.....மோடி பிரதமாராக வந்தால் அந்த ஆண்டவனாலும் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது....ஆனால் இன்னும் நாலு மாதங்களில் இந்தியாவுக்கு நல்ல காலம் பொறக்குது...டும்...டும்.. .நல்ல காலம் பொறக்குது.... என்று குடுகுடுப்பை அடிக்க.......
இதக்கேட்டு இவரைப் போய் மௌன குரு...எதுவும் பேசமாட்டார் என்று எள்ளி நகையாடிய மோடிகளுக்கும் மீடியாகளுக்கும் பேரிடி.....
விட்டாரா மோடி நியுட்டனின் எதிர்வினை விதியாக எடுத்து விட்டாரு பாரு அய்யா.......ஆமாம் இன்னும் நாலு மாதங்களில் நானே பிரதமர் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்குது...இந்தியக் கடலில் பாஜக அலையடிக்குது...டும்...டும்.." என்று இன்று அவரும் எதிர் குடுகுடுப்பை அடிக்க....
இப்படி இந்த இரண்டு பெரிசுகளும் ஏடா கூடா எதையோ சொல்லிக் கிட்டு இருக்க......ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் என்று எங்க பாட்டி சொல்லுவா அந்தக் கதையா.......
நேற்று பெய்த மழைக்கு திடீர்னு முளைச்ச காளானாய் டில்லியில ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மிகாரங்க அதிரடியாய் பிரதமர் நாற்காலியைப் பிடிக்க இந்தியா புல்லா ஆள்பிடிக்கிராயிங்க.....
எப்படியாவது ஆட்சிக்கு வரணும்னு இங்கே இவியிங்க பண்ணுற கூத்தப் பார்த்தா ஆம் ஆத்மி அரசியலில் ஒரு காமெடி கட்சியா? என்று நினைக்க தோணுது
முதல்ல அதிரடி நடிகர் விஷால்தான் எங்க கட்சி தமிழ்நாட்டுக்கு தலைவர் என்று சொன்னாயிங்க அவரும் ஆளை விடுங்கப்பா...நம்மல வடிவேலு மாதிரி ஆக்கிப்பிடுவாயிங்க என்று இல்லை சாமியோனு எடுத்தாரு ஓட்டம....
ஆம் ஆத்மினா ஏதோ புதுசா பாலிவுட்ல ஜொள்ளு படம் எடுக்கிராயிங்கனு கவர்ச்சீ நடிகை நமிதா அம்மணியும் அடடா...அதுல ஒரு குத்தாட்டம் போடலாமான்னு கேட்க...அவியிங்களும் இப்போதைக்கு இது கவர்ச்சி படம் இல்ல அம்மணி...அப்புறம் சொல்லுறோம்னு கழட்டிவுட்டுடாயிங்க.........
இப்ப என்னடானா.........
அய்யோ...இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலப்பா என்று காதைக் கிழிக்கும் சத்தம் கோடம்பாக்கத்திலிருந்து கேட்குது.......
அய்யோ பாவம் தலைவா என்றதுக்கே தள்ளாட விட்டுப்புட்டாயிங்க....இப்ப ஜில்லாவிலும் வடை சுட வச்சுப்புடுவாயிங்களோனு.....இளையதளபதி வீட்டுக்குள்ளிருந்துதான் அந்த கூப்பாடு.....
தளபதி என்றதும் அந்த காலத்து படைத்தளபதி என்று நினைச்சுக்கிட்டாயிங்களோ..........?
ஒருபக்கம் ஆம் ஆத்மி காமடி செய்வதுபோல் தெரிந்தாலும் அதன் வீரியம் இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை இப்படித்தான் விளக்குமாறு கட்சின்னு அசால்டாய் இருந்தாயிங்க கடைசியில தலைநகர் கோட்டையை கோட்டை விட்டாயிங்க........
நம்ம வலைப்பூவில் ஏதாவது கருத்துக்கணிப்பு வைச்சு நேரத்தைப் போக்கிக்கிட்டு இருந்தா...இங்கேயும் ஏட்டிக்கு போட்டியா வாக்களித்து குழப்புராயிங்க நம்ம மகா பதிவுலக மக்கள்..........
உங்கள் பார்வையில்.........
ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் டில்லியில் ஆட்சி அமைப்பதை ஆதரிக்கின்றேர்களா...?
உங்கள் பார்வையில்............
இந்த நாட்டுக்கு ஆம் ஆத்மி கட்சியும் அதன் ஆம் ஆத்மிக்களும் தேவையா?
ஆனால்...இந்த வாக்கெடுப்பில் இப்படி ஒரு விளக்குமாறு கட்சி நாட்டுக்கு தேவை....அப்போதுதான் யாரு இனி ஆட்சிக்கு வந்தாலும் நாடு நல்லாயிருக்கும்
காமெடியன்களை ஆங்கில நாடகங்களில் அறிவில் சிறந்தவர்களாக 16-ஆம் நூற்றாண்டிலேயே ஷேக்ஸ்பியர் காட்டியிருப்பார்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |