கடும் சிரமத்திற்கிடையில் அன்னா ஹசாரேயின் பட்டினிப் போராட்டத்திற்கு பிறகு லோக்பால் அமல் படுத்தப்பட்டுள்ளது
அதன் சிறப்பம்சமாக..........
ஊழல் வழக்கு விசாரணையில் இருக்கும் போதே சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்
(அது சரி நியாயன்மார்களே!...அவியிங்க ஊழலில் சம்பாதித்த சொத்துக்கள் இங்கே இருந்தால்தானே...அவியிங்க அம்புட்டுபெரும் சுவிஸ் வங்கியில் ஒளித்து வைத்திருந்தால் என்ன செய்வீங்க...?அல்லனா அம்புட்டுபெரும் வெளிநாட்டில் சொத்து வாங்கி வச்சா என்ன செய்வீங்க...?)
இன்னொரு சிறப்பம்சமாக.........
வெளிநாட்டு பகிர்மான ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ், ஒரு வருடத்தில் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வெளிநாட்டு நன்கொடைகளை பெறுகிறவர்கள் லோக்பால் வரம்பின் கீழ் வருவார்கள்.
(அதுவும் சரிதான் நியாயன்மார்களே!.....அவிங்க இப்படி ரூ.9,99,999/-மட்டும் வாங்குனா எந்த பால் வரம்புக்கு கீழ் வருவாயிங்க....கள்ளிப்பால் வரம்பா? வம்பா?
ஒருபக்கம் லோக்பால் மக்களுக்கு நன்மை செய்வது போல் தெரிந்தாலும் அது சரிவர கடைபிடிக்கப் படவில்லையெனில் நடிகை அமலாபால் நடிப்பு போன்றுதான் கேளிக்கையாகிவிடும்
மீண்டும் அன்னா ஹசாரே பட்டினிப்போராட்டம் தொடங்க வேண்டிய நிலைதான் வரும்....அப்போது ஆளும் அரசுகள் அவரை சாந்தப்படுத்த சில ஜால்சாப்பு வேலைகள் செய்யும்....
எப்படியோ இந்த லோக்பால் மாட்டுப் பால் போன்று கெட்டு திரிந்துபோகாமல் இருந்தால் நல்லதுதான்....
இங்கே சிரிக்க சில (நகைச்)சுவையான லோக்பால் பற்றிய கீச்சுக்கள்
நன்றி என் ட்விட்டர் நண்பர்களுக்கு..........
Mirchi Dentist™
இன்னைக்கு விவாதித்தால் இன்னைக்கே பால் #லோக்பால்
இது வரை பசங்க நெனச்சது அமலா பால்! இப்போ நெனைக்கிறது லோக் பால் ! சபாஷ்! இதுவே முன்னேற்றம் தான்! Jai ho
இந்தியன் தாத்தாவ விடவா பெரிய தண்டனையா கொடுக்கப்போறாங்க#லோக்பால்
ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா மட்டுமே போதாது! : ராகுல் காந்தி # வேணுமின்னா ரெண்டு பாக்கெட் ஆவின்பால் வாங்கி அனுப்பட்டுமா?
அன்னா ஹசாரே எதிர்பார்த்த லோக்பால் வந்தாச்சு
இனி எந்த issueக்கு உண்ணாவிரதம் இருக்கலாம்னு அவங்க team முடிவு பண்ணும்.
வலுவான லோக்பால் இல்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம்- அண்ணா #அமலாபால் எங்கேஜ்டு தெரிஞ்சி பெரிசு நமக்காக லோக்பாலை கொண்டு வர டிரை பண்ணுது
லோக்பால்
மசோதா நிறைவேறியது அன்னாஹாசரேக்கு அல்ல, ஆம்.ஆத்மிகளுக்கு கிடைத்த வெற்றி!
வர்ற தேர்தல்ல மக்கள் துடைப்பத்த தூக்கிடுவாங்கன்ற பயம் :)
லோக்பால் அமலாபாலின் கொள்ளுப்பாட்டியா (சென்னிமலை மைண்ட் வாய்சுகள்)
ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா மட்டுமே போதாது: ராகுல் காந்தி #அமலாபால் மசோதா ஒன்னு கூட்டுவோமா?
லோக்பால் மசோதாவால் 50 சதவீதம் ஊழல் ஒழியும்: அன்னா ஹசாரே # மீதி 50? அது திரும்பவும் 100 சதவிகிதம் ஆயிரும்!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |