எந்தக் காலத்தை
சேர்ந்தவரோ....?
அந்தக் காலத்திலேயே
எஸ்.எம்.எஸ் கவிதைகள்
எழுதிக் குவித்தவரு...
அய்யன் வள்ளுவரு
அந்தக் காலத்து
புலவர்களில் பெரியவரு...
அய்யா....சாமி
அவரு
அந்த காலத்து பெரியாரு
இந்தக் காலத்து பெரியாரு
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
என்று சொன்னவரு....
அய்யன் வள்ளுவரோ...?
அந்தக் காலத்து பெரியாரு
கடவுள் இல்லை என்றும்
சொல்லவில்லை
கடவுள் இருக்கார் என்றும்
கட்டுக்கதை விடவில்லை
இருந்தால்
இருந்துவிட்டு போகட்டும்
இல்லையென்றால்....
இல்லாமல் போகட்டும்
மனிதனை மறந்துவிடாதே
நல்ல மனிதர்களே
நாளும் தெய்வம்...........
பொதுப்படையாய்
புலம்பிவிட்டு
புண்ணியவான்
போய்விட்டாரு......
கடவுள் வாழ்த்து பாடினாலும்
எந்தக் கடவுள் பெயரையும்
எழுதி வைக்காதவரு.......
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
என்ன நாஞ் சொல்றது....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |